Showing posts with label தோணி பூவா. Show all posts
Showing posts with label தோணி பூவா. Show all posts

Monday, May 30, 2011

சுயேச்சை மின் உற்பத்தி ஒப்பந்த விவரத்தை மக்களுக்கு தெரிவை - தோணி பூவா

ரகசிய அதிகார சட்டத்திலிருந்து அகற்றி, சுயேச்சை  மின் உற்பத்தி ஒப்பந்தத்தை அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்கும் அவசியத்தில் இருக்கும் தருணத்தில், அவைகளை மக்களுக்கு  காட்ட வேண்டுமென்று  பெட்டாலிங்   உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் தோணி பூவா தேசிய முன்னணிக்கு சவால் விடுத்துள்ளார்.

தனது அறிக்கை அவர் கூறியதாவது "மக்கள் நலனைப் பணயம் வைத்து கொள்ள லாபத்தை கொள்ளையடிக்க அந்த நிறுவனங்கள் அடைவதற்கு வழி அமைத்த அந்த ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய மறுப்பதால், அரசாங்கம் அவைகளை வெளியிட வேண்டும்" என்றார் அவர்.

"அரசாங்கம் மறு ஆய்வு செய்வதற்கு கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் இடம் தார இயலாது என்று கூறிய ம.சீ.ச வின் தேசிய தலைவர் சுவா சை லேக்கின் கருத்து எந்த ஒரு லாபத்தையும் மக்களுக்கு தராது.

ஆகையால், இவ்விவகாரம் குறித்து சுவாவிடம் விவாதம் செய்வது அனுகூலத்தையும் தராது என்பது உறுதி. அதன் அடிப்படையில், தேசிய முன்னணி அமைச்சரவை அந்த ஒப்பந்த உள்ளடக்க தகவலை வெளியிட வேண்டும் என்று சுவா வலியுறுத்த வேண்டும்" என்று தோணி தெரிவித்தார்.