Friday, April 29, 2011

‘பெர்காசா’வை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்!









இனவாத அரசியல் கலாச்சாரத்தை கைவிட்டு ஜனநாயக அரசியல் செயற்பாடுகளின் மீது தேசிய முன்னணி முழு நம்பிக்கை வைத்திருந்தாள், தீய சக்தியாக விளங்கும் பெர்காசாவின் சங்கப் பதிவை உடனடியாக இரத்து செய்து அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என ஜ.செ.க-வின் தேசிய உதவித் தலைவர் மு.குலசேகரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பெர்காசாவின் எல்லை மீறல் செயலுக்கு அளவுகோள் என்பது இல்லாமல் போய்விட்டது. ஆரம்பக் கட்டத்தில் இனவாத வார்த்தைகளை விதைத்த பொழுது மௌனமாக இருந்த தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள், இன்று அவை துளிர் விட்டு வளரும் பொழுது அதன் ஆழமான பாதிப்பை உணர்கிறார்கள் என்பது உண்மையாகிறது என குலா கூறினார்.
வன்முறையாக பேசுவதும், வன்முறையாக சாடுவதும், வன்முறையாக ஆர்பாட்டம் நடத்துவதும் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தாது என்று பெர்காசாவுக்கு தெரியாதா? தனது இனத்தின் சகல அம்சங்களை பாதுகாக்க பெர்காசா குரல் எழுப்பலாம், கோரிக்கை விடலாம், ஆனால் அவை மற்ற இனத்தவர்களின் ஜனநாயக உரிமைக்கு பாதிப்பு தரும் அளவிற்கு நடந்துக்கொள்வது ஏற்புடையதள்ள. இவ்வாறு செய்வதினால், அவை பல இன மக்களுக்கிடையே வெறுப்புத்தன்மையை உருவாக்கும் என்பது திண்ணம். பெர்காசாவின் உண்மையான நோக்கம் என்ன? மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதா? அல்லது இந்நாட்டில் மலாய் அல்லாத மக்களை தனது கொள்கைக்கு பலிகொடுப்பதா? என குலசேகரன் கேள்வியெழுப்பினார்.
இப்பொழுது தனது அடுத்த கட்ட இனவாத செயலை தூண்டுவதற்காக, தற்போது பெர்காசா ரெலா உறுப்பினர்களை தனது இனவாத கொள்கைக்கு பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கியதா? இல்லையென்றால், ரெலா சீருடையில் பெர்காசாவின் அப்துல்லா, நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என அவர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.
பெர்காசா தனது உறுப்பினர்களின் மனதில் பிற இனத்தவர்களின் பற்றி மிகவும் ஈனத்தனமான முறையில் பேசி அவர்களை இனவாத மோகத்தில் தள்ளி அவர்களின் மனதில் நஞ்சை பூசுகிறது. இதனால் எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் நாட்டின் பல இன மக்களின் ஒற்றுமை சீர்குலைந்து போகும் அபாயம் தோன்றும் நிலை உருவாகிவிட்டது. அதைவிட பொது மக்களின் மத்தியில் ஒரு வகை அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் தெளிவாக கூறலாம். அதே தருணத்தில் பெர்காசாவின் எல்லை மீறல் மோசமடைந்தால், மக்களிடையே இருக்கும் அச்சம் தலைதூக்கினால் நாட்டில் கலவரம் ஏற்படும் சாத்தியமும் உள்ளது.
அதனால் இவர்களின் செயல்களை அடியோடு வேரறுக்கப்பட்டு நாட்டில் சமாதானமும் சுபிச்சமும் மற்றும் சமமான வாய்ப்பு சந்தர்ப்பங்கள் அமைக்க அரசு எண்ணம் கொண்டிருந்தாள் பெர்காசா இயக்கத்தின் சங்க பதிவினை இரத்து செய்து உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க முயலவேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் சொன்னார்.
பெர்காசாவின் எந்த ஒரு ஆர்பாட்ட அணிக்கும் இனியும் போலீஸ் அனுமதியோ? அல்லாதோ பாதுகாப்போ வழங்க கூடாது என்று உள்துறை அமைச்சு பரிந்துரை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் நாட்டு மக்கள் சுதந்திரமாக தமது மக்கள் பணியை மேற்கொள்ளுவதற்கு போலீசும் தனது கடமையை சரிவர செய்து சமமான பாதுகாப்பு தன்மையை வழங்க வேண்டும் என குலசேகரன் கேட்டுக்கொண்டார்.

Thursday, April 28, 2011

கிள்ளான் எம்.பி ஏற்பாட்டில் குறைந்தபட்ச சம்பளம் பற்றி கலந்துரையாடல்


தற்போது மலேசியர்கள் குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சனையே சம்பளம்தான்.
நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் இந்த தொழிலாளர்களின் சம்பளமோ குண்டு சட்டியில் குதுரை ஓட்டுவதுப் போல் அதே அளவில்தான் உள்ளது என வருத்தம் தெரிவித்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தொழிலார்கள் தினத்தை முன்னிட்டு குறைந்த பட்ச சம்பளத்தை பற்றி ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
இக்கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை (29 ஏப்ரல்) காலை மணி 9 தொடங்கி பிற்பகல் வரை, எம்.பி.பி.ஜே அலுவலகத்தில், பிளிக் பூங்கா மவாரில் நடத்தப்படவுள்ளது என ஜ.செ.க உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
பட்டதாரிகள், தொழிற்சங்கம், அரசு சார்பற்ற இயக்கங்கள், முதலாளிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கும் இந்த கலந்துரையாடலில் சில முக்கிய விசயங்கள் பேசப்படவுள்ளன. அதில் குறைந்தபட்ச சம்பளத்திற்கும் ஏழ்மை நிலைக்கும் உள்ள தொடர்பு, அடிப்படை சம்பள நிர்ணயிப்பு குழுவின் பங்கு, மாற்றத்திற்கான நடவடிக்கை என்பவன அடங்கும்.
அண்மையில் இந்த தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பற்றி பல முறை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன். கேட்கும் போதெல்லாம் வரும் ஒரே விடை அரசு இதனை ஆராய்ந்து வருகிறது. குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் என சொல்லி சொல்லி காலம் தாழ்த்தி வருகிறது.
ஆனாலும் தற்போது தொழிலாளர்கள் பெரும் குறைந்தபட்ச சம்பளமே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளான சம்பளம் தான் அதாவது ரிம 720- க்கும் குறைவான சம்பளம். இது தற்போதைய வாழ்க்கை செலவை ஈடுக்கட்ட முடியுமா? என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.
இத்துணைக் காலம் இந்த தொழிலாளர் வர்கத்தினர் ஏழ்மையில் வாடினது போதும். அவர்களின் சம்பள உயர்வுக்கு போராட வேண்டியதை தவிர வேறு வலி ஏதும் இல்லை போல் தெரிகிறது. ஆகவே, இந்த குறைந்தபட்ச சம்பள உயர்வை எந்த அணுகுமுறையில் நாடலாம் என்பதனை கண்டறியவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இக்கலந்துரையாடலைப் பற்றி மேல் விவரங்கள் தெரிந்துக்கொள்ள அழைக்க வேண்டிய நபர் ராஜ் 0166045390

போக்குவரத்து குற்றத்திற்கு கைது செய்வது முறையா?

மக்கள் ஓசை செய்தி 28/04/2011 




Wednesday, April 27, 2011

முதுகெலும்பு இல்லாத ம.இ.காவை புறக்கணிக்க வேண்டும், குலசேகரன்


பலரும் பலவிதமாக எதிர்த்த இண்டர்லோக் நாவலை தடைசெய்ய முடியாது என்று மிகவும் புன்னகை கலந்த கேலித்தனம் கொண்ட முக பாவனையுடன் நாட்டின் துணை பிரதமர் முகைதீன் யாசின் நாடாளுமன்ற விவாதத்தின் போது நாவலின் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்தார்.
அவரின் அந்த அறிவிப்பு, இந்திய சமுதாயத்தை தேசிய முன்னணி அரசாங்கம் துளி அளவு கூட மதிக்கவில்லை என்பதனை தெளிவுபடுத்திவிட்டது. அதற்கு தோதாக ம.இ.கா-வும், தலையசைத்து சம்பதம் தெரிவித்தது.
இருப்பினும், இவ்விவகாரம் இன்னும் ஓயவில்லை என்று தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு நன்கு புரியும். இண்டர்லோக் நாவலை இடைநிலைப் பள்ளியின் பாட புத்தகப் பயன்பாட்டிலிருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய சமுதாயம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதும் அவர்களுக்கு தெரியும் என பந்தை ரெமிஸ் துன் சம்பந்தன் தோட்டத்தில் உரை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் கூறினார்.
மேலும் இந்நாவலில் இடம்பெற்றுள்ள வாக்கிய கோளாறுகள், சரித்திர தவறுகள் அனைத்தும் இந்திய சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தை சிதைக்கும் அளவிற்கு அமைந்திருக்கிறது என்று தேசிய முன்னணி  உணர்ந்துள்ளது. ஆனால் எதனால் இவை அனைத்தும் அறிந்த ஒரு அரசாங்கம் இதுநாள் வரை இண்டர்லோக் நாவலை தடைசெய்ய தயக்கம் காட்டுவது ஏன்? என குலா கேள்வியெழுப்பினார்.
தேசிய முன்னணி இப்பொழுது ஒரு வெளிப்படையான தைரியத்தில் உள்ளது. அதாவது, கூடிய விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில், இந்த இண்டர்லோக் நாவல் பிரச்சனை தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பினை பெரிதும் பாதிக்காது என்ற பகல் கனவில் இருக்கிறது.
அண்மையில் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் தி.மோகன், தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் ஆதரவு உள்ளது என்று மிகவும் ஆரவாரத்துடன் பேச ஆரம்பித்துள்ளார்.
இந்த இண்டர்லோக் நாவல் விவகாரம் மட்டுமே தேசிய முன்னணியின் உணர்ச்சியற்ற கர்வமுள்ள அரசியல் சாசனத்தை முறியடிக்க முடியும் என்பதே திண்ணம். ம.இ.காவை போன்ற முதுகெலும்பு இல்லாத கட்சிக்கு, இண்டர்லோக் நாவல் பிரச்சனை என்பது ஒரு பெரிய பிரச்சனையல்ல. காரணம், தைரியமாக குரல் எழுப்ப திறமை இல்லாத கட்சிதான் ம.இ.கா என குலசேகரன் சாடினார்.
இண்டர்லோக் நாவல் தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பக்கூடியவர்களுக்கு, நிச்சயமாக அதன் காரணம் விளங்கும். அதன் அடிப்படையில், இந்நாவல் இடைநிலைப்பள்ளியில் கட்டாயப் பாட நூலாக பயன்படுத்தப்பட்டால், அவை உறுதியாக இன ஒற்றுமையில் நஞ்சுத் தன்மையை உருவாக்குவதை நாம் ஆணித்தரமாக சொல்லலாம் என அவர் கூறினார்.
ஆகவே இனியும் தேசிய முன்னணி இந்தியர்களின் எதிர்ப்பு குரலை பொருப்படுத்தாமல் புறக்கணித்து தொடர்ந்து செயல்பட்டால், இந்திய சமுதாயம் தனது அதிகாரப்பூர்வமான சக்தியாக விளங்கும், வாக்குரிமையைக் கொண்டு அடுத்தப் பொதுத்தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர முயற்சி செயல் வேண்டும் என குலசேகரன் வேண்டுகோள்விடுத்தார்.

செம்பருத்தி இணையதள செய்தி 

போர்க்குற்ற விவகாரம் : அனைத்துலக விசாரணைக்கு வேண்டுகோள்


ஐக்கிய நாடுகள் சபை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள இலங்கை போர்க்குற்ற அறிக்கையினைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் நவனீதம்பிள்ளை இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்க் குழுவின் அறிக்கையினை ஆதாரமாக வைத்து இலங்கை மீது அனைத்துலக விசாரனை ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும். இந்த விசாரணையானது பக்கச்சார்பில்லாத, சுதந்திரமான விசாரணையாக இருக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“இறுதிக்கட்டப்போரின்போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.  அது வரைக்கும் நான் இந்த அனைத்துலக விசாரணைக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.”
“போர்க் குற்றங்களை பாரதூரமான அளவில் மேற்கொள்பவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும். போர்க்குற்றவாளிகளை தண்டனைகளிலிருந்து தப்பவைக்கும் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். எனவேதான் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையைப் போன்ற நாடுகளில் கட்டாயம் அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன்” என்றார்.

செம்பருத்தி இணையதள செய்தி. 



Wednesday, April 20, 2011

ஜ.செ.க-வின் செயலல்ல !!!

மக்கள் ஓசை செய்தி 20/04/2011


ஆபத்தான பாலத்தை உடனே மாற்றியமைக்க வேண்டி கண்டனம்

மக்கள் ஓசை செய்தி 20/04/2011


மின்னஞ்சல் ஒரு கண்துடைப்பு

மக்கள் ஓசை செய்தி 20/04/2011


மக்களை பிளவுபடுத்தும் மகாதீர்

மக்கள் ஓசை செய்தி 20/04/2011



சட்ட ஆலோசனை வழங்க தயார் !!!

மக்கள் ஓசை செய்தி 20/04/2011


Friday, April 15, 2011

உண்மையில்லாத அறிக்கை வேண்டாம்

மக்கள் ஓசை செய்தி 15/04/2011

ஒற்றுமையை சீரழிக்கும் நாவல்

மக்கள் ஓசை செய்தி 15/04/2011


புத்தாண்டு வாழ்த்துக்கள்

மக்கள் ஓசை செய்தி 15/04/2011

போலீஸ் ஆர்பாட்டம்; மக்கள் அமைதி மறியல்

தமிழ் நேசன் செய்தி 15/04/2011



கலாச்சார உடையில் சிவகுமாரும் சிவநேசனும்


தமிழ் நேசன் செய்தி 15/04/2011

நண்பன் செய்தி 15/042011

Monday, April 11, 2011

நாவல் தடைசெய்யும் வரை போராட்டம் தொடரும்

நண்பன் செய்தி 11/04/௨௦௧௧



ஏமாற்றுதல், ம.இ.க-வின் பழக்கமான வழக்கம்

நண்பன் செய்தி 11/04/2011



இந்தியர்களுக்கு வாய்ப்பு குறைவாக காணப்படுகிறது.

நண்பன் செய்தி 11/04/2011

கணேசன் சொல்ல மட்டுமே முடியும்

நண்பன் செய்தி 11/04/2011



தந்திரமானாலும் மௌனமானாலும் ம.இ.க.வால் இந்தியர்களுக்கு பலனில்லை.

மக்கள் ஓசை செய்தி 11/04/2011

அதிகமாக பேசும் நஸ்ரி

மக்கள் ஓசை செய்தி 11/04/2011



Thursday, April 7, 2011

தேவையை அறிந்து ஆயுதத்தை காவல்துறை பயன்படுத்த வேண்டும்

மக்கள் ஓசை செய்தி 07/04/2011

சட்டமன்ற கூட்டத்திற்குப் பின் முடிவு பிறக்கும்

மக்கள் ஓசை செய்தி 07/04/2011



முதல் நாள்: பக்காத்தானுக்கு நல்ல தொடக்கம்

மலேசியாஇன்று செய்தி 
7 APR | தலைப்பு செய்தி.

பக்காத்தான் ரக்யாட்டின் சரவாக் தேர்தல் பரப்புரை  அமோகமாக தொடங்கியுள்ளது. நேற்றிரவு கூச்சிங், சிபு, மிரி ஆகிய இடங்களில் அதன் பரப்புரையைச் செவிமடுக்க ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

கூச்சிங்கில் ஐஓஐ வாணிக வளாகத்தில் உள்ள திறந்தவெளி அங்காடி மையத்தில், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உள்பட மாற்றுக்கட்சித் தலைவர்களின் உரைகளைக் கேட்பதற்கு சுமார் ஐயாயிரம் பேர் திரண்டிருந்தார்கள்.

மீரியில், பூல்வார்ட் வாணிக மையத்திலும், சிபுவில் நிபுணத்துவ மருத்துவ மையத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
மக்கள் பெருந்திரளாக வந்ததைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் அதை தம் டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி குறிப்பிட்டதுடன் இது பக்காத்தானுக்கு நல்லதொரு தொடக்கம் என்றும் கூறினார். 
2006 மாநிலத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இப்போது தேர்தல் பரப்புரைகளுக்கு வருவோர் உறுதியான முடிவுடன் வருவதாக உள்ளூர் செய்தியாளார்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தனர்.

கூச்சிங்கில் கூட்டம் நடைபெற்ற இடத்தில்  கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்து விட்டதால், கூட்டத்தினர் பேச்சுகளைக் கேட்பதற்கும் பேச்சாளர்களைப் பார்ப்பதற்கும் வசதியாக சுற்றிலும் ஒலிபெருக்கிகளும் வீடியோ திரைகளும் வைக்கப்பட்டன.
குவான் எங்தான் நேற்றைய கூட்டங்களின் நாயகனாக விளங்கினார். மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் கலந்து பேசிய அவர் “இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய போரில்” குதித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

பிஎன் பங்காளிக் கட்சியான எஸ்யுபிபி பல புதிய முகங்களைக் களம் இறக்கியிருந்தாலும் பக்காத்தானின் உண்மையான எதிரி நீண்ட காலம் முதலமைச்சராக இருக்கும் அப்துல் தாயிப் மகமுட்தான் என்று பினாங்கு முதலமைச்சர் கூறினார்.

“எஸ்யுபிபி வேட்பாளர்கள் திறமையானவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வாக்களிக்குமுன்னர் ஒரு கேள்வியை நீங்கள்  கேட்க வேண்டும்.
“இந்தப் புதிய வேட்பாளர்கள் ‘பெக் மோவை’ஆதரிப்பவர்களா?”, என்று தாயிப்பின் நரைமுடியைக் குறிக்க சரவாக் சீனர்கள் பேச்சுவழக்கில் குறிப்பிடும் சொல்லைப் பயன்படுத்தினார் குவான் எங்.
“அவர்கள் ஆமாம் என்று சொன்னால் வாக்காளர்களுக்கு அது பிடிக்காது. இல்லை என்று சொன்னால் தாயிப்புக்கு ஆத்திரம் வந்துவிடும். அதன் விளைவு பயங்கரமாக இருக்கும்.”

தாயிப்பும் துணை முதலமைச்சரும் எஸ்யுபிபி தலைவருமான ஜோர்ஜ் சானும் பதவி விலகுவதாகக் கூறியிருப்பதை வைத்தும் குவான் எங் கிண்டலடித்தார்.
“2006-இலும் இதையேதான் சொன்னார் சான். பதவி விலகினாரா? அதைச் செய்யவில்லை,ஆனால், தாயிப் செய்ததுபோல் மறுமணம் செய்துகொண்டார்.
“அவர்கள் பதவி விலகுவர் என்று நம்புகிறீர்களா?”, என்றவர் வினவினார். 

மீரியில், ச்சான் ஆறாவது தவணையாக சட்டமன்றத்துக்குப் போட்டியிடும் பிசா தொகுதியிலும் டிஏபி ஒரு தேர்தல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அங்கு 2006 தேர்தலைக் காட்டிலும் ஆதரவு கூடியிருந்ததாக டிஏபி இளைஞர் தலைவர் அந்தோனி லோக் கூறினார். அங்கு தேர்தல் நிதிக்கு ரிம10,200 திரட்டப்பட்டது.

கூச்சிங் கூட்டத்தைப் போலவே இங்குப் பேசியவர்களும் தாயிப்பைக் கிண்டல் செய்தார்கள்.

பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், சிறிது நேரம் சீனத்தில் பேசி கூட்டத்தின் பாராட்டைப் பெற்றார். இன்னொரு உதவித் தலைவரான தியான் சுவா, பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் சரவாக்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமத்தைத் திருப்பிக் கொடுக்கும் என்று வாக்குறுதி அளித்தார். 

மீரி, இயற்கைவாயுவைப் பெரிய அளவில் கொண்டிருக்கும் ஒரு பகுதியாகும்.

பண்டார் கூச்சிங் முன்னாள் எம்பி சிம் குவான் யாங், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரேசா கொக் ஆகியோரும் அக்கூட்டத்தில் பேசினார்கள்.
சிபுவில், சரவாக் டிஏபி தலைவர் வொங் ஹோ லெங், கிட் சியாங் ஆகியோரின் உரையைக் கேட்க தெருவெல்லாம் பெருங் கூட்டம் கூடியது


Wednesday, April 6, 2011

இந்திய இளைஞர் போலிசாரால் சுடப்பட்டார்

நண்பன் செய்தி 06/04/2011

தமிழ் நேசன் செய்தி 06/04/2011

ஞானமில்லாத ஞானசேகரன்

மக்கள் ஓசை 06/04/2011





இந்திய சமுதாயத்தை பிசைக்காரனாக்காதே


மக்கள் ஓசை செய்தி 06/04/2011



சுப்பையா ஆதாரத்தை காட்டு, இல்லையேல் போடு வாய்க்கு பூட்டு


மக்கள் ஓசை செய்தி 06/04/2011



சிங்கத்தின் குகையில் நரிகளா?

மக்கள் ஓசை செய்தி 06/04/2011