Monday, February 28, 2011

அமைதி பேரணிக்கு போலீஸ் அனுமதி வழங்கியிருக்கவேண்டும்

செம்பருத்தி இணையதள செய்தி








மக்களின் ஜனநாயக உரிமையை காவல்துறை மீண்டும் மீண்டும் மதிக்க தவறியுள்ளது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்  மு.குலசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை இண்டர்லோக் நாவலுக்கு எதிரான அமைதி பேரணியை முடக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைப்பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம் என குலா தெரிவித்தார்.
கடந்த 11 ம் திகதி பிப்ரவரி மாதம் பேரணிக்கு அனுமதி பெரும் மனுவை இண்ட்ராப் மனித உரிமைக் கட்சி டாங் வாங்கி காவல்துறையிடம் விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எதனால் நிராகரிக்கப்பட்டது என்று காவல்துறை நேர்மையாக சொல்ல இயலாத பட்சத்தில், அந்த பேரணிக்கு மக்கள் கூடினால் அவர்களின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்கக்கூடாது.
மாறாக அந்த பேரணிக்கு காவல்துறை பாதுகாப்பு தர வேண்டும். அதே சமயத்தில் விண்ணப்பம் செய்ய வில்லை என்ற பாளை நொண்டி சாக்கை போலீசும் சம்பத்தப்பட்ட அமைச்சும் இனியும் சொல்ல கூடாது என குலா சொன்னார்.
ஆகவே, பலரும் எதிர்க்கும் அந்த நாவலை உடனடியா தடை செய்ய வில்லை என்றால், அனைத்து இந்தியர்களும் ஆதரவு தெரிவுக்கும் இண்ட்ராப் மனித உரிமைக் கட்சியின் இண்டர்லோக்கிற்க்கு எதிரான அமைதிப் பேரணிக்கு காவல்துறையும் அரசாங்கமும் மற்றும் துணைப்பிரதமர் முகைதீன் யாசினும் கண்டிப்பாக மரியாதை வழங்க வேண்டும் என்பது என்னுடைய உறுதியான நிலைப்பாடு என குலசேகரன் மேலும் சொன்னார்.
இதற்கிடையில், கொள்கை பூர்வாங்க அமைப்பின் இயக்குனர் லிம் தேக் கீ இண்டர்லோக் நாவலுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.
அவரின் பார்வைப்படி, இண்டர்லோக் நாவலில் மனதை புன்படுத்தப்படும் வார்த்தைகள் அதிகமாக உள்ள வேளையில் அதனை ஐந்தாம் படிவ மாணவர்களின் உபயோகத்திலிருந்து முற்றா தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மலேசியாகினி இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட அந்த கல்விமானின் மின்னஞ்சல் குறிப்பில், ஒரு சில தரப்பினர் “அவதிப்புக்கு எதிரான சுதந்திரத்தை” தடை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு செய்வதினால் தவறு இழைத்தவர்களின் கருத்துக்கள் சரியானதாக கருதப்பட்டு அப்புத்தகத்தை பாட நூலாக அங்கிகாரம் வழங்க முயற்சியை நிலைநாட்டலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வேலை, மாலாய் இனத்தவர்களை அவமானப்படுத்தும் வாசகம் ஒன்று இருந்தால் இதே போன்ற “அவதிப்பு எதிரான சுதந்திரத்தை” தடை செய்வார்களா என்று அவர் கூறியிருந்தார்.

Thursday, February 10, 2011

Tuesday, February 8, 2011

பாவப்பட்டால் ஏமாற்றப்படுவோம், எச்சரிக்கை !!!



மலாய் ஆலோசனை மன்றத்தின் நடவடிக்கை விரோதத் தன்மையை நிலைநாட்டும்

செம்பருத்தி இணையதள செய்தி









ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்தும் உள்நோக்கத்துடனும் இழிவு படுத்திய இண்டர்லோக் நாவலை தடைசெய்ய கோரிக்கை விடுத்தால், மலாய் ஆலோசனை மன்றம் ஒட்டுமொத்த மலேசியவாழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அளவிற்கு குரல் எழுப்புவது நாட்டில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற  உறுப்பினர் மு. குலசேகரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குலா தெரிவித்துள்ளதாவது:
நாவலை தடைசெய்ய இந்தியர்கள் கொடுக்கும் குரலுக்கும் மலாய் மேலாண்மையை காரணமாக கொண்டு மலாய் ஆலோசனை மன்றம் சொல்லும் காரணத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. எதற்க்காக மலாய் மேலாண்மையை பற்றி இவர்கள் இவ்வேளையில் பேச வேண்டும்?
பிற இனத்தவர்களுக்கு சகல வாழ்வுரிமைகள் இருக்கும் வேளையில் இந்நாட்டில் பிறந்து வளர்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் அதே சலுகைகளும் உரிமைகளும் உண்டு என்பதனை மலாய் ஆலோசனை மன்றம் ஆழமாக உணர்தல் வேண்டும்.
இண்டர்லோக் நாவலில் வார்த்தை கோளாறுகள் மட்டுமல்லாமல் சரித்திரபூர்வமான தவறுகள் ஏற்பட்டுள்ளது. அதனை முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த ஒரு மதத்தை சார்ந்த எழுத்தாளனாக இருந்தாலும், ஒரு நாவலை எழுதும் முன், அதன் கற்பனை கதாபாத்திரத்திற்கு நல் வழி ஒழுக்க குணங்களை எடுத்து காட்ட வேண்டும்.
அதனை செய்யாமல் இந்திய சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் விமர்சனம் செய்து புத்தகம் வெளியிட்டு அதனை பாட புத்தகமாக அங்கிகாரம் வழங்கியது மலேசியவாழ் இந்தியர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
இந்நாவலை தடை செய்ய கோரிக்கை விடுத்தது “இந்தியர்களின் பாரம்பரியத்தை பற்றி இனிமேலும் யாரும் தவறாக எழுதக்கூடாததற்க்காகவும், இந்தியர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மட்டுமே”. ஆனால் மலாய் ஆலோசனை மன்றம் மிகவும் உணர்சிகரமாக இப்பிரச்னை கையாளுகிறது.
ஒரு மலாய் இலக்கியவாதியின் நாவலை ஒட்டுமொத்த இந்திய சமுதாயமே எதிர்க்கும் அதே வேளையில், அனைத்து மலாய்காரர்களும் இனிமேலும் எந்த ஒரு அரசியல் கூட்டணியின் இந்திய பிரதிநிதிகளுக்கு ஆதரவு வழங்ககூடாது என்பது, தனிமனித ஜனநாயக சுதந்திரத்திற்கு  தடையாக அமைகிறது.
மேலும், மலாய்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் மத்தியில் ஒற்றுமையை முறிக்க தூண்டும் செயலாகவும் உள்ளது. இவர்களின் இத்தகையான கூற்று, மலாய் மக்களிடம் விழிப்புணர்வை கொண்டுவராது, மாறாக மனதில் காலத்திற்கும் அழியாத விரோதத்தன்மையை நிலைநாட்டும் என்பதே திண்ணம்.
இந்தியர்களின் ஆட்சேப குரலின் காரணத்தால் இண்டர்லோக் நாவலை தடைசெய்தால், அரசாங்கம் பலவீனமாகிவிடும் என்று மலாய் ஆலோசனை மன்றம் கூறுவது அர்த்தமற்றது. அந்நாவல் இந்திய சமுதாயத்தின் கௌரவத்திற்கு இழிவை ஏற்படுத்தியது, இந்தியர்களின் மத்தியில் வேதனை உண்டாகியுள்ளது.
பல அடிப்படையற்ற குறிப்புகள் அடங்கிய மகஜரை மலாய் ஆலோசனை மன்றம் பிரதமருக்கு வழங்கியதோடு மௌனம் சாதிப்பது அனைவருக்கும் நல்லது. மேலும் மேலும் விஷம குணத்தோடு சூழ்நிலையை உஷ்ண நிலைக்கு கொண்டு செல்ல முற்படுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.
தவறாக கதை விமர்சனம் செய்த ஒரு இலக்கியவாதிக்கு இத்தனை ஆதரவு குரல் என்றால், பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குரல் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதனை அரசாங்கம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
ஆகவே அரசாங்கம் மலாய் ஆலோசனை மன்றத்தின் மகஜரை பெற்றுக்கொண்ட அதே வேளை, இவர்களின் எல்லை மீறலான செயலை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இவ்வாறு குலசேகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Thursday, February 3, 2011

தவறாக எழுதினால் சட்ட நடவடிக்கையை தான்


செனட்டர் கோகிலன், மக்கள் பிரதிநிதி அல்ல என்கிறார் சுகுமாரன்

செம்பருத்தி இணையதளம் செய்தி

இந்தியர்களை இழிபடுத்திய வாசகத்தின் எந்த பக்கத்தை பார்த்தாலும் அதனை வெறுக்க தோணும் பொழுது புரிந்து கொள்ளுங்கள் என்று கூறுவது அமைச்சருக்கு அழகல்ல. வார்த்தையின் வழி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் கோகிலன் பிள்ளை போன்ற அரசியல் வியாதிகளை எந்த ஒரு தமிழர் நிகழ்வுக்கும் அழைக்கக்கூடாது. கோகிலன் வார்த்தையில் இந்திய சமூதாயத்தின் எதிர்காலத்திற்கு கெட்ட சகுனத்தை காண முடிகிறது என சுகுமாரன் சாடியுள்ளார்.

உண்மையான இந்தியனாக இருந்து இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டினால் மட்டுமே துணை அமைச்சர் பதவியில் நிலைக்க முடியாது என்ற தேசிய முன்னணியின் அரசியல் தத்துவத்தை கோகிலன் பிள்ளை நன்கு அறிந்து வைத்துள்ளார். ஒரு சில நேரங்களில் ஒட்டு மொத்த இந்திய சமுதாயமே அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் பொழுது, இந்திய சமுதாய பிரதிநிதிகள் இந்தியர்களை மேலும் இழிவுபடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுவதும் அவர்களின் அரசியல் பதவிக்கும் பட்டத்திற்கும் விலை போவது வாடிக்கையாகிவிட்டது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபகாலமாக இண்டர்லோக் நாவல் நாட்டில் பல சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த சர்ச்சை எதனால் எழுந்தது என்பதனை செனட்டர் கோகிலன் முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்தியர்கள் பல கோணங்களில் இண்டர்லோக் நாவலின் எழுத்தினால் பாதிகப்படுள்ளனர். அந்த புத்தகத்தின் வாசகங்கள் இந்திய சமுதாயத்தை பெரிய அளவில் பாதித்தது மட்டுமல்லாமல் பிற இனத்தவரையும் கேவலப்படுத்தியுள்ளது. அப்புத்தகத்தை முழுமையாக படித்த பிறகுதான் அந்நாவலுக்கு எதிராக இந்தியர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். அனைவரின் கண்களுக்கு தவறாக தென்படும் வாசகம் கோகிலன் கண்களுக்கு மட்டும் சரியாக தென்படுவது எப்படி? துணை அமைச்சர் என்ற காரணத்தினாலோ? என சுகு கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பாக சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ம.இ.க தலைவர்களும் அந்நாவலுக்கு முழுமனதாக எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில் கோகிலன் மட்டும் தனியாக ஒரு கருத்தை வெளியிடுவது, அமைச்சரவையில் இந்திய பிரதிநிதிகள் ஒற்றுமையாக இல்லை என்பது தெளிவாகிறது. மேலும், இந்நாவல் குறித்து தேசிய முன்னணியின் இந்திய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் ஒன்று கூடி பேசவில்லை என்பதும் நிரூபணமாகிறது.

இது அரசியல் பிரச்னை அல்ல, மாறாக ஒரு சமூதாயத்தின் பிரச்னை என்று அனுதினமும் அனைத்து இந்தியர்களும் குரல் எழுப்பும் பொழுது செனட்டர் கோகிலன் போன்றவர்கள், அரசாங்கத்திற்கு சார்ந்து பேசுவது 52 வருட வழக்கமாகிவிட்டது. 

வெளியுறவு துறை துணை அமைச்சர் செனட்டர் கோகிலன் வெளிநாட்டு விவகாரங்களில் உண்ணிப்பாக கவனம் செலுத்தும் அதே வேளையில் உள்நாட்டில் என்னென்ன பிரச்னைகள் உண்டு என்பதனை சீர்தூக்கி பார்க்க வேண்டும். இது நாள் வரை வாய் மூடி மௌனமாக இருந்த கோகிலன், திடீர்ரென வீறுகொண்டு எழுந்து தன்முகத்தில் உமிழ்ந்து கொள்ளும் அளவிற்கு கருத்து தெரிவித்ததை கண்டால், மௌனமே அவருக்கு சிறந்தது என்று சொல்லவேண்டும்.

இனி இண்டர்லோக் நாவல் பிரச்னையில் அவர் மேலும் கருத்துரைக்காமல் இருந்தால், அது அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் சிறப்பாக இருக்கும் என சுகுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.