Tuesday, March 29, 2011

“ம.இ.கா கேட்பது பிச்சை; நாங்கள் கேட்பது உரிமை” : சிவநேசன்


“இதோ இன்னொரு முதுகெலும்பு இல்லாத ம.இ.கா-வின் அரசியல்வாதி. ம.இ.க-வின் தலைமைச் செயலாளர் முருகேசன் அவர்கள் ஜென்ஜாறோம் தேசிய வகைத் தமிழ் பள்ளிகளுக்குக் சென்று கூறிய வார்த்தைகளை மீண்டும் வேறு தமிழ் பள்ளிகளில் சென்று தமிழர்களின் எதிர்காலத்தில் மண்ணை தூவ வேண்டாம் என்று நான் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறேன்” என்று சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
பள்ளியில் சென்று நாலு நல்ல வார்த்தை சொல்லி மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ஊக்குவிப்பார்கள் என்றால், கிள்ளி கொடுத்தால் போதும் என்கிறீர்களே இது தான் ம.இ.கா-வின் புதிய தலைமைத்துவத்தின் அரசியல் வடிவமைப்பு திட்டமா. அரசாங்கத்திடமும் இப்படிதான் தமிழ் பள்ளிகளுக்கு குரல் கொடுப்பீர்களா. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு துளி பதம் போல″ முருகேசனின் கூற்று, தமிழ் பள்ளிகளின் மேல் ம.இ.க எவ்வாறான எதிர்கால மேம்பாட்டு திட்டத்தை கொண்டுள்ளது என்பதனை தெளிவுபடுத்துகிறது.
அரசாங்கத்திடம் அள்ளிக் கொடு என்று உரக்க குரல் கொடுங்கள் என்று மக்கள் கேட்டால், அவர்களிடமே சென்று கிள்ளி கொடுக்க முன் வாருங்கள் என்று சொல்வது முற்றிலும்
முட்டாள்தனமாக உள்ளது என்று மேலும் அவர் கூறினார்.
மக்களிடம் சேரவேண்டிய உரிமையைக் கேட்க மக்கள் கூட்டணி தலைவர்கள் அல்லும் பகலும் பாடுபடுகிறோம். ஆனால் நீங்கள் கிள்ளி கொடுங்கள் என்று சொல்லி இந்திய மக்களை பிச்சை எடுக்க சொல்கிறீர்களே இது எந்தவகையில் நியாயம்? இதற்கு தான் ம.இ.க இத்தனை காலம் அம்னோ
தேசிய முன்னணியில் இருந்ததா? அவர் கேள்வியெழுப்பினார்.
தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த வண்ணமாக இருக்கும் வேளையில் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்திடம் நமது உரிமையை தட்டிக்கேட்கக்குரல் எழுப்பி சாதனை செய்வீர்கள் என்றால், மக்களை பழைய சாக்கடையில் தள்ள முயற்சி செய்வது முற்றிலும் வேதனையாக உள்ளது என்று தன்மனக்குமுறலை சிவநேசன் வெளிப்படுத்தினார்.
கிள்ளி கொடுங்கள் என்று சொல்லி விட்டால், எந்த பெற்றோர்கள் தனது பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்ப முன்வருவார்கள்? எப்படி இந்திய சமுதாயம் முன்னேற முடியும்?
கற்றவனுக்கு அழகா இது? என மேலும் கேள்விகளைத் தொடுத்தார்.
புத்துணர்வை உருவாக்குவதற்கான அடிப்படையை இந்திய சமுதாயத்தின் மனதில் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் இந்திய சமுதாயத்தில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது என்றும் கேட்டார்? அத்தகையான தாழ்வு மனப்பான்மை கொண்ட வார்த்தைகளை இனியும் நீங்கள் தமிழ் பள்ளிகளில் பயன்படுத்த வேண்டாம் என்பதனை உங்களுக்கு அறிவுறுத்தவிரும்புகிறேன் என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார்.
ஒவ்வொரு இந்தியர்களும் இன்னொரு இந்தியர்களின் வாழ்வில் சமமான உரிமையைக் கொண்டாப் பாடுபட வேண்டும். மற்றவர்களுக்கு நல்லதை கொடுக்க தயாராக இருந்தால்தான், மக்கள் சிறந்த பிரதிநிதித்துவத்தை காண முடியும். இந்த ஜனநாயக மனப்பான்மையை, உங்களின் அரசியல் லாபத்திற்காகக் கூறு போட்டு விற்காதீர்கள் என்றார்.
இன்று கிள்ளி கொடு என்று சொல்லும் நீங்கள், நாளை அரசாங்கம் தமிழ் பள்ளிக்குக் கிள்ளி கொடுப்பதை வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? என்று சிவநேசம் கேட்டார்.
ஆகவே, மு.குலசேகரன் வார்த்தையால் “முதுகெலும்பு இல்லாதக் கட்சி ம.இ.கா” என்று சொன்னதை நீங்கள் செயல் வடிவத்தில் ஆதாரப் படுத்தியதற்கு மீண்டும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி வருங் காலங்களில், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மக்கள் கூட்டணியின் இந்திய தலைவர்கள் அள்ளி கொடு என்று குரல் கொடுப்போமே ஒழிய கிள்ளி கொடு என்று கீழ்த்தனமாக சொல்லமாட்டோம் என்று ஆவேசமாகக் கூறினார் சிவநேசன்.

Monday, March 28, 2011

குலசேகரனின் குரல் மக்கள் கூட்டணியின் குராலாகும், மனோகரன் எம்.பி


இண்டர்லோக் நாவல் பிரச்னை என்பது இந்தியர்களின் பிரச்னை என்று ம.இ.கா குரல் கொடுக்கும் வேளையில், இண்டர்லோக் மலேசியர்களின் பல இன மக்களின் ஒற்றுமையின் நீரோட்டத்தை சிதைக்கும் என்ற கோணத்தில் மு.குலசேகரன் குரல் எழுப்புகிறார் என்பதனை அனைவரும் முதலில் அறிந்திருக்க வேண்டும் என தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மனோகரன் தெரிவித்தார்.
இண்டர்லோக் நாவலின் உள்ளடக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் என்பது இந்தியர்களின் எதிர்ப்பு குரலின் பலத்தின் பிரதிபளிப்பாகும். ஆனால் அந்நாவல் தடைசெய்ய வேண்டும் என்பது மக்கள் கூட்டணியின் கோரிக்கையாகும். அதற்கு, மக்கள் கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மு.குலசேகரன் முன்னெடுத்து எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பது உண்மை.
அதே சமயத்தில் நாடாளுமன்றத்தில் குலசேகரனின் குரல் மக்கள் கூட்டணியின் குரலாக திகழ்கிறது. ஆனால், ம.இ.கா வின் சௌகரியமான எதிர்ப்புக் குரல் தேசிய முன்னணியின் குரலா என்பதனை சகோதரர் கே.பி.சாமி அவர்கள் முதலில் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என மனோ மேலும் சொன்னார்.
இது தொடர்பில் மனோகரன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மக்கள் கூட்டணியின் தலைவர்கள் திருவாய் மலர வில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.  அன்வார் இப்ராஹிம், லிம் கிட் சியாங் மற்றும் ஹடி அவாங் போன்ற தலைவர்கள் பேசினால் மட்டுமே மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு பிரதிபளிக்கும் என்று சொல்வது அர்த்தமற்றது. குலசேகரனின் குரல் மக்கள் கூட்டணியின் வகைச்சொல் என்பதனை அறிந்திருக்க வேண்டும்.
சகோதரர் கே.பி.சாமி ஒரு சிறந்த போராட்டவாதி. மேலும், இந்திய மக்களின் சேவகனாக இருக்கும் வேளையில், ம.இ.கா வின் உண்மையான நேர்மையான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட முடிவு அறிவித்த பொழுது குலசேகரன் கம்பிரமாக எழுந்து நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் மொகைதீனை எதிர்த்து குரல் கொடுத்தார் என்பது மறைக்க முடியாத உண்மை.
ஆனால், ம.இ.க-வின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தும் ஒன்றுமே பேசவில்லையே. அதுதானே வேதனையாக உள்ளது. முதுகெலும்பு இல்லை என்று குலசேகரன் சொன்னதில் எந்த ஒரு தவறும் கிடையாது. காரணம் நாடாளுமன்றத்தில் அந்த சூழ்நிலை தான் உண்மை நிலையின் தோற்றம்.
மேலும், இன்றைய நாள் வரை நாடாளுமன்றத்தில் இந்த இண்டர்லோக் நாவலுக்கான எதிர்ப்புக் குரல் ம.இ.கா-விடம் இருந்து கிளம்பியது கிடையாது. இது நாள் வரை  ம.இ.கா-வின் பிரதிநிதிகள் எந்த ஒரு தீர்மானத்தையும் நாடாளுமன்ற விவாதத்திற்கு சமர்பித்ததே கிடையாதே? அதனை என்ன என்று சொல்வது?
நான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில்  இண்டர்லோக் நாவலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்த பொழுது, சபாநாயகர் அதனை புறக்கணித்து விட்டார். அந்த வேளையில் நான் எழுந்து குரல் கொடுத்த பொழுது ம.இ.கா தோழர்களின்  ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு வேதனை தான் கிட்டியது. அந்த தருணத்தில் எதனால் ம.இ.காவின் தோழர்கள் வாய் மூடி மௌனம் சாதித்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
மக்கள் வழங்கிய அங்கிகாரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கும் இந்திய பிரதிநிதிகள் அனைவரும் ஒற்றுமையாக கூடி பேசியிருந்தால், குலசேகரன் அவ்வாறு சொல்வதற்கு இடம் பிறந்திருக்காதே. ஆனால், எதை செய்தாலும் ம.இ.கா அரசியல் நோக்கத்துடனும் சுயநலத்துடனும்  செய்வது, இந்திய சமுதாயத்திற்கு பாதிப்பை தருகிறது என்ற உண்மை நாம் காலம் காலமாக அறிந்த ஒன்று.
இந்த நாவல் தடைசெய்ய வேண்டும் என்ற குரல் ஒருபுறம் எழுந்த வண்ணமாக இருக்க, மறு ஆய்வுக்கு ஒப்புதல் தெரிவித்தது ம.இ.கா என்பது உண்மை.
இன்று அந்நாவல் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பது மக்கள் கூட்டணியின் கோரிக்கை. ஆனால், திருத்தப்பட்ட பிறகு பயன்படுத்தப்படும் என்பது தேசிய முன்னணியின் அசையாத நிலைப்பாடு. இதில் எந்த கோரிக்கைக்கு ம.இ.கா சரி என்று தைரியமாக சொல்ல இயலும்?
ம.இ.கா நியமித்த பிரதிநிதிகள் மாற்றங்களுக்குரிய வேலையை மட்டும் தான் செய்ய முடியும். ஆனால், மக்களின் கோரிக்கை அதுவா? மக்களின் கோரிக்கை தடைசெய்ய வேண்டும் என்பதாகும். அதற்கு என்ன செய்கிறது ம.இ.கா ? இன்றைய நாள் வரை தேசிய முன்னணியின் ஒரே ஒரு அம்னோ அல்லது ம.சீ.ச-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்குமா ம.இ.கா ? கிடையாது.
சகோதரர் கே.பி.சாமி அவர்கள், தனது அறிக்கையில் மு.குலசேகரனிடம் தொடுத்த அனைத்து கேள்விகளையும் ம.இ.கா-வின் தேசிய தலைவரிடமும், ம.இ.கா-வின் முழு அமைச்சரிடமும் முதலில் கேட்க வேண்டும். பட்டியலை பிறரிடம் கேட்பதை விட, முதலில் பட்டியலை போட்டு வித்தியாசங்களை கவனிக்கவேண்டும் என மனோகரன் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, March 17, 2011

தீராத இந்தியர்களின் பிரச்சனைகள்


குலசேகரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பரபரப்பான உரை

செம்பருத்தி இணையதள செய்தி 

இவ்வருடத்திற்கான நாடாளுமன்ற கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய மாமன்னரின் உரையை ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் நேற்று (15/03/2011) ஆய்வுரை வழங்கினார். அதன் உரை பின்வருமாறு :
                                                                                                                           இண்டர்லோக் நாவல் 
நாட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ள இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் அரசாங்கம் சுணக்கம் காட்டியுள்ளதை பார்த்தால், நாட்டின் கல்வி அமைச்சரின் காது மந்தமான நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் மக்களின் கோரிக்கைகள் செவிடன் காதில் உதிய சங்காக இருக்கும் வகையாக அமைகிறது.
அந்த நாவல் பள்ளிகளில் பயன்படுத்தப்படாது என்று அரசாங்கமும் கல்வியமைச்சும் கூறியது அப்பட்டமான பொய்யாக திகழ்கிறது. காரணம் அந்நாவல் இன்னும் ஒரு சில பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த வகையில் பார்த்தால் நாட்டினுடைய கல்வி முறை மிகவும் பின்தள்ளிய நிலையில் இருப்பதாக இதன் வழி வெளிப்படையாகிறது.
அந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளும் சரித்திரப்பூர்வமான அம்சங்களும் முற்றாக ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். அந்த அடிப்படையில் இண்டர்லோக் நாவலை பள்ளியில் உபயோகிக்க அனுமதி ஆரம்ப கட்டத்திலேயே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய அரசாங்கத்திற்கு எண்ணமில்லை. இதனால் பல பல சர்ச்சைகள் எழுந்துள்ளதை அரசாங்கம் நன்கு அறியும்.
இந்த நாவலை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடும் மக்களின் குரலை அரசாங்கம் ஏன் மதிப்பளிக்க மறுக்கிறது?
எதனால் அந்நாவலை தடை செய்ய இவ்வளவு கால அவகாசம்?
ஒரு விவகாரத்திற்கு எதிர்ப்பு பேரலை உருவாகும் பட்சத்தில், சூழ்நிலையை சரிசெய்ய உடனடியாக அந்த விவகாரத்திற்கு முடிவெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஆனால் உலகில் எந்த நாட்டிலும் நடக்காத ஒரு அதிசயம் இந்நாட்டில் மட்டும் நடக்கிறது. எதை மக்கள் எதிர்க்கிறார்களோ அதனை நிலைநாட்ட முனைப்பு காட்டுகிறது இந்த தேசிய முன்னணி அரசாங்கம்.
இந்த நாவலை தணிக்கை செய்த குழுவினர்களின் பெயர்களை அரசாங்கம் பட்டியலிட வேண்டும். மேலும், அந்த தணிக்கை குழு கடந்த காலத்தில் எத்தனை நாவலை அனுமதி தந்துள்ளது மற்றும் அந்நாவலின் தலைப்புகளை வெளிப்படுத்தியாகவேண்டும் இந்த அரசாங்கம். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசாங்க அதிகாரிகள், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுவது அவமானமாக உள்ளது.

வறுமை நிலை ஒழிப்பு
வறுமை என்பது ஒரு இனத்திற்கு சம்பந்தமானது அல்ல. வறுமை இனம் மதம் பாராதது. சமீபத்தில் ம.இ.க-வின் தேசிய தலைவர் டத்தோ பழனிவேல், நகர மையத்தில் ஏழ்மை நிலையில் துன்பப்படும் இந்தியர்கள் மீண்டும் தோட்டங்களுக்கு செல்ல ஆலோசனை கூறியது யாராலும் என்றுக்கொள்ள முடியவில்லை. தான் ம.இ.க வின் தலைவர் என்ற நாற்காலியில் அமர்ந்த பிறகு நாட்டில் நிறைய இந்திய கோடீஸ்வரர்களை உருவாக்குவேன் என்று வசனம் பேசிய அவர், இன்று தலை கீழாக பேசுவது நியாயமாகாது.
இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரச்னைகளையும் கவனிக்க உருவாக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவைக்கு குழு என்னவானது?
ஏன் அந்த குழுவினால் இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க முடிவில்லை? சமுதாயத்தில் குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணமாக உள்ள வேளையில் அந்த குழு எந்த விவகாரத்தில் தீவிரம் காட்டுகிறது?
சிம்பாங் ரேங்காம் தடுப்பு முகாமில் இந்தியர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம். ஆனால் நமது சமுதாயத்திற்கு வாய்ப்புகளின் சதவிகிதம் நிலையாக உள்ளதா?
இல்லை, காரணம் முறையான புனரைமைப்பு திட்டங்கள் கிடையாது. தனிமனிதனின்  சராசரி வருமானம் 36,000 வெள்ளி என்று தேசிய முன்னணி சொல்கிறது, ஆனால் பெரும்பான்மையான இந்தியர்களின் மாதத்திற்கு 500 வெள்ளியை தாண்டுவதில்லை என்று பழனிவேல் சொல்கிறார். இவர்களில் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்று தெரியவில்லை.
ஒரே அரசாங்கத்தில் இருக்கும் பிரதிநிதிகள் இரு வேறு விதமான எண்ணிக்கையை வெளியிடுவது, திடுக்கிட செய்கிறது. இத்தனை காலமாக இந்தியர்களின் அடிப்படை வருமானத்தை உயர்த்த யாரும் முயலவில்லை என்பதே மெய்.
ஆகவே, நாட்டில் வறுமையை ஒழிக்க அரசாங்கம் உடனடியாக மக்கள் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுபினர்களை கொண்டு ஒரு சிறப்பு தேர்வு நிலையிலான செயற்குழு ஒன்றை அமைத்தாக வேண்டும்.
அதில் இன மதம் பாராமல் அனைத்து நிலையிலும் ஏழ்மை நிலையில் வாழ்கின்ற மக்களின் வறுமையின் காரணத்தை கண்டறிந்து ஆய்வு செய்து அதற்கான உடனடி தீர்வை அரசாங்கம் எடுக்க திட்டமிடுதல் வேண்டும்.

காட்டு விலங்குகள் கடத்தல்
சுமார் 2 பில்லியன் வரை  நாட்டில் காட்டு விலங்குகளின் கடத்தல் வழி வருமானம் பெறுகிறார்கள். இதற்காக நமது அரசாங்கம் பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனால் அமுல்படுத்தியதா? என்ற கேள்விக்கு பதில் இன்னும் கிடைக்காமல் இருக்கிறது.
சமீபத்தில் மலேசியா இராணுவத்தை சார்ந்த நான்கு அதிகாரிகள், அதிசய பறவை இனத்தை சேர்ந்த “எங்காங்” குருவியை கழுத்தறுத்து கொன்று அதனுடன் புகைப்படம் ஒன்றை எடுத்த விஷயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
இதனால் இந்த அதிசய குருவிகளின் எண்ணிக்கை அழிந்துக்கொண்டே போகும் வாய்ப்பு அதிகரிக்க சாத்திமுள்ளது. எதனால் அரசாங்கம் காட்டு மிருங்கங்களை காப்பாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? பாதுகாப்புக்கு செல்லும் ராணுவ அதிகாரிகள் இப்படியா மதியற்ற நிலையில் நடந்துக்கொள்வது?
ஆய்வு குறியீட்டின் படி காட்டு விளங்கு கடத்தலில் மலேசியா ஒரு முக்கியமான குவிப்பு மையமாக திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு அரசாங்கம் உடனடி முடிவு எடுத்தாக வேண்டும்.

குவலா பிலா மற்றும் மெர்லிமௌ தமிழ்ப்பள்ளி
தெனாங்கிலும் மெர்லிமௌ சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேசிய முன்னணிக்கு சாதகமான நிலையில் முடிவுற்றது. ஆனால் தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படும் மென்று சொன்னது, இதற்க்கு முன்பை போல வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்படுமா அல்லது நிறைவேற்றப்படுமா? என்பது கேள்வி குறையாகவே உள்ளது?
ஆகவே மெர்லிமௌ தமிழ் பள்ளி கட்டிடம் எப்பொழுது நிறைவு பெரும் என்பதனை அரசாங்கம் அறிவித்தாக வேண்டும். அதே சமயத்தில் குவலா பிலா தமிழ் பள்ளிக்கான நிலம் காணப்பட்டதா என்ற விவரத்தை அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.
மேலும், இனி வருங் காலங்களில் எந்தனை தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் கட்டப்படும்? அவை எந்தெந்த இடத்தில் கட்டப்படும்? என்ற குறிப்பையும் அரசாங்கம் பட்டியலிட வேண்டும்.
இறுதியாக, புகிட் ஜாலில் குடியிருப்பாளர்களின் விவகாரத்தில் அரசாங்கம் முறையாக நடந்துக்கொள்ளவேண்டும். அவர்களின் வீடுகளை தரைமட்டமாக முயல்வது ஏற்று கொள்ளமுடியாத ஒன்றாகும். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செய்வி சாய்த்தல் வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும்.

நன்றி..
மு. குலசேகரன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்

Wednesday, March 16, 2011

“சிம்ம குரலோன் பி.பட்டுவை யாரும் மறக்கவில்லை” : கோ.ஆனந்தன்


அரசியல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதில் தலைவரையோ அல்லது தலைவர் குடும்பத்தினரையோ இன்றைய அரசியல்வாதிகள் மறந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை ஓலமிடுதல் மிகவும் வேடிக்கையாக உள்ளது என ஜ.செ.க தாமான் லோக் லிம் கிளையின் தலைவர் கோ.ஆனந்தன் தெரிவித்தார்.
“ஜ.செ.க-வின் சிம்ம குரலோன் பி.பட்டுவை மறந்துவிடாதீர்கள்” என்று அறிக்கை விடுவது மேலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். தலைவர் பட்டுவை யார் மறந்துவிட்டார்கள்? கட்சியா? அல்லது அவரின் அரசியல் சுவடிகளை பின்பற்றிவரும் இன்றைய பேராக் மாநில ஜ.செ.கவின் மக்கள் பிரதிநிதிகளா? யாரும் ஒரு பொழுதும் அவ்வாறு செய்தது கிடையாது என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆனந்தன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 
பி.பட்டுவின் மகள்களுக்கு அரசியலில் அங்கிகாரம் வழங்க வேண்டும் என்று சொல்வது நியாயமான ஒன்றாக இருக்கும் வேளையில், வாரிசு அரசியல் என்ற கலாச்சாரம் ஜ.செ.க-வில் உள்ளது என்று சுட்டிக்காட்டி இன்றைய கட்சின் சிங்கமாக விளங்கும் கர்பால் சிங்கையும், சின்னமாக காட்சியளிக்கும் லிம் கிட் சியாங் போன்ற தலைவர்களின் புதல்வர்களை எடுத்துக்காட்டாக வைத்து கோரிக்கை விடுவது மூத்த அரசியல்வாதி பஹாங் மாநில சிம்மாத்திரி அவர்களுக்கு அழகல்ல.
ஆனால், தற்பொழுது உள்ள சூழ்நிலையை பார்த்தால், ஒரு சிலர் சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்துவிடலாம் என்று எண்ணம் கொண்டுள்ளது போல் தெரிகிறது. பிறரின் இயலாமையை சரியாகப் பயன்படுத்தி கொண்டு அறிக்கை விடுவது திறமையல்ல. ஒருவருக்கு நல்லதை செய்ய வேண்டுமென்ற எண்ணமிருந்தால் அதனை ஓலமிடாமல் செய்வது நன்று. தலைவர் சிம்மாதிரிக்கு இது தெரியாதா என்ன?
பி.பட்டுவின் அரசியல் சேவையை யாரும் மறந்திருக்காத வேளையில், அவரின் புதல்விகளுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தால், அப்பயணத்தையும் நன்றே தொடக்கி வைக்க மு.குலசேகரனும், அ.சிவநேசனும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவிகரம் வழங்க நானும் என்ன கிளையின் உறுப்பினர்களும் தயாராக இருக்கிறோம்.
ஆனால், எந்த ஒரு தலைவரின் வாரிசுகளையும் கட்டாயப்படுத்தி அரசியலில் ஈடுபட நாங்கள் எண்ணம் கொள்ள மாட்டோம்.
இறுதியாக, தலைவர் பி.பட்டுவை யாரும் மறக்கவில்லை என்பதனை இவ்வேளையில் கௌரவமாக தெரிவித்துக்கொள்கிறேன். அறிக்கைக்காக தலைவர் பி.பட்டுவின் பெயரை களங்கப்படுத்த  வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்பருத்தி இணையதள செய்தி 

முறையாக கொடுத்தால் முறையாக பரிசீலிக்கப்படும்

மக்கள் ஓசை செய்தி 16/03/2011 


முதலீட்டு பணத்தை கேட்டு மகஜர்

மக்கள் ஓசை செய்தி 16/03/2011


மக்களுக்கான அரசாங்கம் மக்கள் மனதை குளிரவைக்கிறது


மக்கள் ஓசை செய்தி 16/03/2011 

Sunday, March 6, 2011

நிலம் வழங்கப்பட்டது ஆனால் அதற்கான கட்டணம் செலுத்தவில்லை

நண்பன் செய்தி 06/03/2011



மலேசியாஇன்று செய்தி: 




பேராக் மாநில ஆட்சியை தேசிய முன்னணி அபகரித்தது. இந்தியர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவதாக கூறி பேராக் மாநிலத்திலுள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் சுமார் 2,000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

ஆனால், அந்த நிலம் யாரிடம் வழங்கப்பட்டது? பேராக் அறவாரியத்திடம் வழங்கப்பட்டது. அவ்வாறியத்தின் உறுப்பினர்கள் யார்? மாநிலச் செயலாளர், மாநில நிதி ஆலோசகர் மற்றும் பல தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களும் அதில் இடம் பெற்றுள்ளனர்.

“எத்தனை இந்தியர்கள் அந்த வாரியத்தில் இடம் பெற்றுள்ளனர்? “பூஜ்யம்”தான் பதில். அதில் இடம் பெறுவதற்கு தேசிய முன்னணி ஆட்சியில் ஓர் இந்தியர் கூடவா இல்லை? அல்லது மஇகாவில் தகுதியான யாரையும் தேசிய முன்னணி கண்டுபிடிக்கவில்லையா?”, என்று கேட்கிறார் குலா.

இதில் நகச்சுவை இருக்கிறது. ஏனென்றால், பேராக் மாநில மஇகா தேசிய முன்னணியில் ஒரு கோமாளித்தனமான பங்காளித்துவத்தைக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து மஇகா சிங்கம் கர்ஜிக்கவில்லை.
தமிழ்ப்பள்ளிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலம் இந்திய பிரதிநிதி இல்லாமல் எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?

தேசிய முன்னணி இனவாதமாக நடந்துகொள்வதில்லை என மார்தட்டிக்கொள்ளும் மஇகா இந்தச் சூழ்நிலைக்கு என்ன பதில் தர முடியும்?

பேராக் மாநில ஆட்சியில் இந்தியர்களின் பிரதிநிதி இல்லை என்பது உண்மை. மேலும், அங்கே இருக்கும் சட்டமன்ற தலைவரும் ஒரு கண்துடைப்புக்கே என்பதும் இந்த விசயத்தில் உண்மையாகிறது.

அந்த நிலத்திற்கான பிரிமியம் ஏன் இதுநாள் வரையில் செலுத்தப்படவில்லை? பிரிமியம் செலுத்தப்படவில்லை என்றால் வழங்கப்பட்டுள்ள 2,000 ஏக்கர் நிலம் பறிபோய் விடும் என்பது அனைவரும் அறிந்ததே.

“அந்த வாரியத்தில் இடம் பெற்றிருப்பவர் மாநிலச் செயலாளர். அப்பிரிமியம் கட்டவில்லை என்றால் நிலம் பறிபோய் விடும் என்பது தெரிந்தே கட்டவில்லையா? அல்லது, இந்த அறவாரியத்திற்குத் தமிழ்ப்பள்ளிகளின்  மீது அக்கறையில்லையா?”, என்று குலசேகரன் வினவுகிறார்.

ஆட்சியை அபகரித்தப் பிறகு தேசிய முன்னணி பல முக்கிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது. அதில் இந்தியர்களின் மனதைக் குளிர வைப்பதற்காக இந்த 2,000 ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தைப் பற்றி வரும் தகவல்கள் இத்திட்டம் வெற்றி பெறும் என்பதைக் கேள்விக்குறியாக்குகின்றன என்றார் குலா.

இந்த நிலத்தின் கதி என்ன? பேராக் அறவாரியம் அந்த பிரிமியம் தொகையைச் செலுத்துமா அல்லது சாக்குப்போகுச் சொல்லி திட்டத்திற்குக் குழிபறிக்குமா? இக்கேள்விகளுக்கு முழுமையான பதில் ஒன்றுமில்லை என்பதுதான் இதுவரையிலான நிலை.

“இந்த விவகாரத்தில் மிகச் சிறந்த அரசியல் நாடகம் நடத்தியது யார்? தேசிய முன்னணியா அல்லது மஇகாவா? இலவசமாகக் கொடுக்கப்பட்ட இந்த நிலத்தை இன்றுவரையில் எந்த ஒரு திட்டமுமின்றி போட்டு வைக்கப்பட்டிருக்கும் பேராக் அறவாரியத்தை நாம் குறை சொல்வதா அல்லது இவ்விவகாரம் குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் இருக்கும் மஇகா தலைவர்களைக் குறை கூறுவதா?, என்று கேட்கிறார் எம்.குலசேகரன்.

தடை செய்யாவிட்டால், அமைதியான முறையில் அனுமதி பெற்ற பேரணி நடைபெறும்

மக்கள் ஓசை செய்தி 06/03/2011




Tuesday, March 1, 2011

“வெளிநாட்டு ஆடு நனையுதென்னு உள்நாட்டு ஓநாய் அழுகிறது”


இண்டர்லோக் நாவலுக்கு எதிரான போராட்டத்தை துணைப் பிரதமர் காவல் துறையின் உதவியோடு தடுத்து நிறுத்திவிட்டார்.
அதே சமயத்தில் நேற்று பிரதமர் நஜிப் ரசாக், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியினர் நாட்டின் மீது உலக நாடுகளின் பார்வைக்கு மலேசியாவை களங்கப்படுத்தும் எண்ணம் கொண்டுள்ளதாக அர்த்தமற்ற கருத்தை தெரிவித்தார்.
நேற்று நாளிதழ் செய்தியில், நாட்டின் உள்துறை அமைச்சர், அந்த ஆட்சேப கூட்டம் வெற்றியளிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஒருவர் தனது கல்வி அமைச்சின் கீழ் செய்த தவறை மறைக்க முற்படுகிறார், இன்னொருவர் உலக நாட்டின் பார்வை பற்றி கவலைப்படுகிறார் மேலுமொருவர் நோக்கம் நிறைவேறவில்லை என்கிறார்.
இவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தங்களது பதவி கவசத்தை தற்காத்துக்கொள்ள பதில்கள் கூறுகிறார்களே ஒழிய, இந்திய சமுதாயம் ஏன் திரண்டார்கள், எதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்கள், அவர்களின் கோரிக்கை என்ன? அது தனிமனித கோரிக்கையா அல்லது ஒரு சமுதாயத்தின் குரலா என்று சீர்தூக்கி பார்க்காமல் மீண்டும் மீண்டும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
இதில் ஒரு சிறந்த வேடிக்கை என்னவென்றால், துணைப் பிரதமர் முகைதீன் யாசின், லிபியா மக்களின் சுதந்திரத்தை மதித்து அவர்கள் ஆட்சேபனை கூட்டத்தை நடத்த கடாபிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் தனது நாட்டில் தனது மக்கள் அதுவும் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படும் இந்தியர்கள் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்த வாய்ப்பும் அடித்தளமும் வழங்காத முகைதீன் அந்த ஆலோசனை தர தகுதியானவரா?
முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம், நம் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு சட்டமா? அனைத்துமே மனித உயிர்கள் தானே, எதற்காக துணைப்பிரதமர் இருமாப்பான கொள்கையுடன் நடந்து கொள்கிறார். இவர் இந்நாட்டிற்கு துணை பிரதமராக இருக்க தகுதியானவரா?
கண்ணுக்கு தெரிந்த தன் நாட்டு இந்திய மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத முகைதீன், கண்ணுக்கு தெரியாத லிபியா நாட்டு மக்களுக்கு ஆதரவு கரம் வழங்குவது என்பது வியப்பாக உள்ளது.
இந்நாட்டில் இந்திய சமுதாயத்தின் போராட்ட சிந்தனைகளை ஒடுக்க நினைக்கிறது தேசிய முன்னணி. இந்தியர்களை அவமானப்படுத்தி அதில் நாட்டின் பல இன மக்களின் ஒற்றுமையின் நீரோட்டத்தை கலைத்து மக்களை பிளவுபடுத்தி காண முயற்சி செய்கிறது. இவ்வருடத்தின் மிகச்சிறந்த அரசியல் தந்திர சூழ்ச்சியின் ஏற்பாடுதான் இண்டர்லோக் நாவால்.
இந்திய சமுதாயத்தின் மேல் ஜாதி என்ற பிரிவுகளை காட்டி வேற்றுமை என்ற வர்ணத்தை பூசி பிளவை உண்டாக்குகிறது தேசிய முன்னணி. இனச் சிக்கலை ஏற்படுத்தும் இந்த தேசிய முன்னணிக்கு ஒரு சில இந்திய கட்சிகளும் அதன் தலைவர்களும் துதிபாடுவது வெட்கமாக உள்ளது. பதவியை தற்காத்துக்கொள்ள தன்மானத்தை விற்பதா?