Showing posts with label லிம் கிட் சியாங். Show all posts
Showing posts with label லிம் கிட் சியாங். Show all posts

Saturday, July 2, 2011

வான் அஹ்மாட், தேசிய முன்னணியின் சொல்பிள்ளை மற்றும் அரசியல் குழப்பவாதி


மக்களை குழப்பி அவர்களிடம் பல பொய்யான தகவல்களை கூறி நற்பெயரை வாங்க முயற்சிக்கிறது தேசிய முன்னணி. அந்த வகையில், பெர்சே 2 பேரணி மத்திய அரசாங்கத்தை மாற்றியமைக்க மக்கள் கூட்டணி மேற்கொண்டு வரும் சதிப்பயணம் என்று தேசிய முன்னணி மக்களின் மனதில் பூச பார்க்கிறது. 

அதற்கு தோதாக தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் டத்தோ வீரா வான் அஹ்மாட் அவர்கள் பெர்சே 2 பேரணிக்கு எதிராக தெவித்த கருத்த பலரின் மத்தியில், தேர்தல் ஆணையத்தின் நேர்மைக்கு கேள்வி குறியை உருவாக்கியுள்ளது. 

ஜ.செ.க -வின் நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் கூறுகையில் " வான் அஹ்மாட் தேசிய முன்னணியின் கைப்பாவையாக செயல்படுவது மட்டுமல்லாமல், தனக்கு வழங்கிய பொறுப்பை அரசியல் சாசனத்திற்கு எதிராக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கிறார் என்று கூறியுள்ளார். 

எதுவேண்டுமானாலும் செய்யும் மக்கள் கூட்டணி"  என்று அம்னோவின் " இன்மைன்" ஏற்பாடு செய்திருந்த "பெர்செவின் கோரிக்கை - தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?" என்ற தலைப்பையோட்டிய கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய பொழுது, வான் அஹ்மாட் கூறியது, அவர் தேசிய முன்னணியின் பொறுப்பான கைபிள்ளை என்பது நிரூபனமானது.  


"சமீபத்தில் நடந்து முடிந்த பல இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணியின் வெற்றியை கண்டு மக்கள் கூட்டணி அஞ்சம் கொண்டுள்ள வேலையில், இந்த பெர்சே பேரணியின் வழி பல விதமான சூழ்ச்சிவலைகளை பின்னி மக்களின் ஆதரவை பெற 
"இது போன்ற கொள்கை கொண்ட துணை ஆணையர் தேர்தல் ஆணையத்தில் இருந்தால், அவர் எவ்வாறு நேர்மையாக தனது கடமையை செய்ய முடியும்? நேர்மை, நியாயம், மாசுபடியாத தேர்தல் முறை வேண்டும் என்று கோரிக்கை விடுவது தவறா? மக்களின் கோரிக்கைக்கு எதிராக குறைகூறும் இது போன்ற ஆணையர் தேவையா? 

ஆகவே, உடனடியாக தேர்தல் ஆணையத்தின் இதர ஆணையர்கள் அனைவரும் கூட்டம் ஒன்றினை அரங்கற்றம் செய்து, வான் அஹ்மாட் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கிட் சியாங் கேட்டுக்கொண்டார். 

Monday, June 27, 2011

பொதுத் தேர்தலில் 11 மாநிலத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றும்.


எந்நேரத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில், நடப்பிலுள்ள 4 மாநிலத்தை தவிர மேலும் 7  மாநிலங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றும் இலக்கை கொண்டுள்ளது என்று ஜ.செ.க வின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். 

அவரின் அந்த மூன்று இலக்குகள் பின்வருமாறு: 

- தற்சமயம் கைவசமுள்ள நான்கு மாநிலங்களின் ஆட்சியை தற்காத்துக்கொள்ளும் 

- மேலும் அதே சமயத்தில் பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற தீவிர முயற்சியை மக்கள் கூட்டணி பலபடுத்தும்.

- நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா, பஹாங், திரங்கானு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை அமைக்க இலக்கை கொண்டுள்ளது.

இந்த இலக்கை முன்னோடியாக வைத்து, வருகிற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு மக்கள் கூட்டணி வலுவான போட்டியை தரும் என்பது உறுதி என்று அவர் கூறியுள்ளார். 

நாட்டினுடைய நடப்பு அரசியல் சூழலை உண்ணிப்பாக கவனித்தால் பொதுத்தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கும் வேளையில், தேசிய முன்னணி தனது ஆட்சி பீடத்தை தக்க வைத்துகொள்ள பல முயற்சிகளை எடுக்கலாம். காரணம், வருகிற தேர்தல் தேசிய முன்னணிக்கும் அம்னோவிர்க்கும் வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமையும் என்று லிம் தெரிவித்தார். 

Wednesday, May 25, 2011

முகைதீன், வரலாற்றில் மிக மோசமான துணை அமைச்சரும் அம்னோவின் துணைத் தலைவருமாவார் - லிம் கிட் சியாங்


ஜ.செ.க தனது அரசியல் கொள்கைகளை விரிவாக்கம் செய்ய எண்ணம் கொண்டுள்ள வேளையில், நாட்டினுடைய துணை பிரதமர் மிகவும் கோமாளித்தனமான வசனங்களை பறக்க விடுகிறார். 

இதற்கு முன்பு நேற்று நாட்டின் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சஹிட் ஹமிடி, ஜ.செ.க வை நோக்கி, கட்சியின் பலத்தை காட்ட மக்கள் கூட்டணியை விட்டு விலகி தேர்தலை சந்திக்குமாறு சவால் விடுத்தார். அவரின் அந்த கூற்று "நவீன சதித்திட்டம்" கொண்டுள்ள அறிக்கையாக அமைந்துள்ளது என்று நான் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், முகைதீன் மக்களை நோக்கி "ஜ.செ.க வின் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்" என்று அறிக்கை தொடுத்தது, சஹிட்டை விட துணைப்பிரதமர் ஒரு புத்திகேட்டவர் என்பதனை தெளிவுபடுத்திவிட்டது. 

முகைதீன், பாகோவில் பேசுகையில், "ஜ.செ.க ஒரு சீனர்கள் ஆதிக்கம் கொண்ட கட்சியாக இருக்கும் வேளையில், முன்பு மலாய் மக்களின் நலன்களை பொருப்படுத்தாமல், இன்று மலாய் மக்களின் மனதை கவர்ந்து ஆதரவை பெற பல சூழ்சிகளை செய்கிறது" என்று கூறியுள்ளார். 

ஒரு வேளை, ஜ.செ.க சீனர்கள் ஆதிக்கம் நிறைந்த கட்சி அது என்றைக்கும் மலாய் மக்களின் நலனை அக்கறை கொண்டதில்லை என்று கூறுவதில் உண்மையிருந்தால், எதற்காக முகைடினும் சஹிட்டும் ஜ.செ.க வின் செயலை கண்டு கொந்தளிக்கவேண்டும்? அவர்கள் இருவரும் அச்சத்தை தளர்ந்தல்லவா இருக்க வேண்டும். மேலும், ஒரு வேளை ஜ.செ.க வின் அந்த செயல் முறை தோல்வியை தழுவினால், அந்நிலையை தன்வசப்படுத்திக்கொண்டு அவ்விருவரும் கண்டனமல்லவா தெரிவிக்க வேண்டும். எதற்காக பீதியில் உளறல்? 

ஜ.செ.கவுக்கு எதிராக வீசப்படும் ஒவ்வொரு செயல்களிலும் உண்மையில்லை மற்றும் அவை அடிப்படையற்றது என்பது அம்னோவிற்கு நன்கு தெரியும் அதே சமயத்தில், ஜ.செ.வின் கொள்கை விரிவாக்கம் திட்டத்தில், ஜ.செ.க மலாய் இனத்தவர்களின் ஆதரவை பெற்றுவிடும் என்ற பயத்தில் அம்னோ உறுப்பினர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது உண்மையே. 

இதற்கு முன்பு ஜ.செ.க எந்த ஒரு பொதுத்தேர்தலிலும் மலாய் வேட்பாளருக்கு வாய்ப்பு தந்து கிடையாது என்று சொல்லும் முகைடினின் ஒரு மதியற்ற துணைபிரதமர் என்பதற்கு சான்று. 

இவர்கள் இருவரின் கூற்று ஒரு தவறானது என்பதனை தெரிவிக்க, ஜ.செ.க கடந்த 10 பொதுத்தேர்தலில் மலாய் வேட்பாளருக்கு வாய்ப்பளித்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

1969-ம் ஆண்டு முதல் முதலாக ஜ.செ.க பொதுத்தேர்தலில் களமிறங்கிய பொழுது , ஜோகூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலத்தில், ஒரு நாடாளுமன்றம் மற்றும் 9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மலாய் வேட்பாளரை நிறுத்தியது. அந்த பொதுத்தேர்தலில், சுமார் இருவர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிவாகை சூடினர். அவர்களில் தாப்பா ரோட் சட்டமன்ற தொகுதியில் இப்ராஹீம் சிங்கேவும், ஹாஜி ஹஸ்ஸான் பின் ஹாஜி அஹ்மாட் சி ருசா தொகுதியிலும் ஜ.செ.க-வின் பிரதிநிதிகளாக இருந்தனர். 

அதனை தொடர்ந்து இன்றைய நாள் வரை சுமார் ஐந்து சட்டமன்ற தொகுதியிலும், மேலும் ஒருவர் நாடாளுமன்ற தொகுதியிலும் ஜ.செ.க வின் சின்னத்தை சிறப்பித்தனர் என்பது வரலாற்று உண்மை. இந்த உண்மையை அறியாத முகைதீன் ஒரு வராலாற்று மூடன் என்றுதான் சொல்லவேண்டும். 

- லிம் கிட் சியாங்- அறிக்கை