Monday, June 27, 2011

பொதுத் தேர்தலில் 11 மாநிலத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றும்.


எந்நேரத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில், நடப்பிலுள்ள 4 மாநிலத்தை தவிர மேலும் 7  மாநிலங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றும் இலக்கை கொண்டுள்ளது என்று ஜ.செ.க வின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். 

அவரின் அந்த மூன்று இலக்குகள் பின்வருமாறு: 

- தற்சமயம் கைவசமுள்ள நான்கு மாநிலங்களின் ஆட்சியை தற்காத்துக்கொள்ளும் 

- மேலும் அதே சமயத்தில் பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற தீவிர முயற்சியை மக்கள் கூட்டணி பலபடுத்தும்.

- நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா, பஹாங், திரங்கானு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை அமைக்க இலக்கை கொண்டுள்ளது.

இந்த இலக்கை முன்னோடியாக வைத்து, வருகிற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு மக்கள் கூட்டணி வலுவான போட்டியை தரும் என்பது உறுதி என்று அவர் கூறியுள்ளார். 

நாட்டினுடைய நடப்பு அரசியல் சூழலை உண்ணிப்பாக கவனித்தால் பொதுத்தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கும் வேளையில், தேசிய முன்னணி தனது ஆட்சி பீடத்தை தக்க வைத்துகொள்ள பல முயற்சிகளை எடுக்கலாம். காரணம், வருகிற தேர்தல் தேசிய முன்னணிக்கும் அம்னோவிர்க்கும் வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமையும் என்று லிம் தெரிவித்தார். 

2 comments:

  1. மக்கள் கூட்டணி ஆட்சியமைக்க மக்கள் உதவ வேண்டும்! இல்லையென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அம்னோ மலாய் இனத்தைத் தவிர மற்ற அனைவரையும் அழித்துவிடும்!

    ReplyDelete
  2. மலேசியாவில் மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்றால் மக்கள் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்

    ReplyDelete