Wednesday, May 25, 2011

முகைதீன், வரலாற்றில் மிக மோசமான துணை அமைச்சரும் அம்னோவின் துணைத் தலைவருமாவார் - லிம் கிட் சியாங்


ஜ.செ.க தனது அரசியல் கொள்கைகளை விரிவாக்கம் செய்ய எண்ணம் கொண்டுள்ள வேளையில், நாட்டினுடைய துணை பிரதமர் மிகவும் கோமாளித்தனமான வசனங்களை பறக்க விடுகிறார். 

இதற்கு முன்பு நேற்று நாட்டின் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சஹிட் ஹமிடி, ஜ.செ.க வை நோக்கி, கட்சியின் பலத்தை காட்ட மக்கள் கூட்டணியை விட்டு விலகி தேர்தலை சந்திக்குமாறு சவால் விடுத்தார். அவரின் அந்த கூற்று "நவீன சதித்திட்டம்" கொண்டுள்ள அறிக்கையாக அமைந்துள்ளது என்று நான் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், முகைதீன் மக்களை நோக்கி "ஜ.செ.க வின் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்" என்று அறிக்கை தொடுத்தது, சஹிட்டை விட துணைப்பிரதமர் ஒரு புத்திகேட்டவர் என்பதனை தெளிவுபடுத்திவிட்டது. 

முகைதீன், பாகோவில் பேசுகையில், "ஜ.செ.க ஒரு சீனர்கள் ஆதிக்கம் கொண்ட கட்சியாக இருக்கும் வேளையில், முன்பு மலாய் மக்களின் நலன்களை பொருப்படுத்தாமல், இன்று மலாய் மக்களின் மனதை கவர்ந்து ஆதரவை பெற பல சூழ்சிகளை செய்கிறது" என்று கூறியுள்ளார். 

ஒரு வேளை, ஜ.செ.க சீனர்கள் ஆதிக்கம் நிறைந்த கட்சி அது என்றைக்கும் மலாய் மக்களின் நலனை அக்கறை கொண்டதில்லை என்று கூறுவதில் உண்மையிருந்தால், எதற்காக முகைடினும் சஹிட்டும் ஜ.செ.க வின் செயலை கண்டு கொந்தளிக்கவேண்டும்? அவர்கள் இருவரும் அச்சத்தை தளர்ந்தல்லவா இருக்க வேண்டும். மேலும், ஒரு வேளை ஜ.செ.க வின் அந்த செயல் முறை தோல்வியை தழுவினால், அந்நிலையை தன்வசப்படுத்திக்கொண்டு அவ்விருவரும் கண்டனமல்லவா தெரிவிக்க வேண்டும். எதற்காக பீதியில் உளறல்? 

ஜ.செ.கவுக்கு எதிராக வீசப்படும் ஒவ்வொரு செயல்களிலும் உண்மையில்லை மற்றும் அவை அடிப்படையற்றது என்பது அம்னோவிற்கு நன்கு தெரியும் அதே சமயத்தில், ஜ.செ.வின் கொள்கை விரிவாக்கம் திட்டத்தில், ஜ.செ.க மலாய் இனத்தவர்களின் ஆதரவை பெற்றுவிடும் என்ற பயத்தில் அம்னோ உறுப்பினர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது உண்மையே. 

இதற்கு முன்பு ஜ.செ.க எந்த ஒரு பொதுத்தேர்தலிலும் மலாய் வேட்பாளருக்கு வாய்ப்பு தந்து கிடையாது என்று சொல்லும் முகைடினின் ஒரு மதியற்ற துணைபிரதமர் என்பதற்கு சான்று. 

இவர்கள் இருவரின் கூற்று ஒரு தவறானது என்பதனை தெரிவிக்க, ஜ.செ.க கடந்த 10 பொதுத்தேர்தலில் மலாய் வேட்பாளருக்கு வாய்ப்பளித்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

1969-ம் ஆண்டு முதல் முதலாக ஜ.செ.க பொதுத்தேர்தலில் களமிறங்கிய பொழுது , ஜோகூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலத்தில், ஒரு நாடாளுமன்றம் மற்றும் 9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மலாய் வேட்பாளரை நிறுத்தியது. அந்த பொதுத்தேர்தலில், சுமார் இருவர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிவாகை சூடினர். அவர்களில் தாப்பா ரோட் சட்டமன்ற தொகுதியில் இப்ராஹீம் சிங்கேவும், ஹாஜி ஹஸ்ஸான் பின் ஹாஜி அஹ்மாட் சி ருசா தொகுதியிலும் ஜ.செ.க-வின் பிரதிநிதிகளாக இருந்தனர். 

அதனை தொடர்ந்து இன்றைய நாள் வரை சுமார் ஐந்து சட்டமன்ற தொகுதியிலும், மேலும் ஒருவர் நாடாளுமன்ற தொகுதியிலும் ஜ.செ.க வின் சின்னத்தை சிறப்பித்தனர் என்பது வரலாற்று உண்மை. இந்த உண்மையை அறியாத முகைதீன் ஒரு வராலாற்று மூடன் என்றுதான் சொல்லவேண்டும். 

- லிம் கிட் சியாங்- அறிக்கை 

No comments:

Post a Comment