Showing posts with label கர்பால் சிங். Show all posts
Showing posts with label கர்பால் சிங். Show all posts
Wednesday, May 18, 2011
Monday, April 11, 2011
Thursday, February 10, 2011
Wednesday, December 22, 2010
Saturday, December 18, 2010
Saturday, December 4, 2010
Wednesday, November 10, 2010
Saturday, October 30, 2010
Tuesday, September 21, 2010
Monday, September 6, 2010
இன ஒற்றுமை சட்ட மசோதா நிறைவேற்றுதல் வேண்டும் - கர்பால் சிங் வேண்டுகோள்.
வெகுநாளாக நிலுவையிலுள்ள தேசிய இன ஒற்றுமை சட்ட மசோதாவை உடனடியாக மத்திய அரசாங்கம் சட்டமேற்றுதல் வேண்டும் என்று ஜ.செ.க-வின் தேசியத்தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினறுமான கர்பால் சிங் கேட்டுக்கொண்டார்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தேசிய இன ஒற்றுமை முன்னேற்ற இலட்சியத்துக்கு பயனுள்ள உத்தரவாதத்தை வழங்கும் என்று அறியப்படுகிறது என்று அவர் கூறினார்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தேசிய இன ஒற்றுமை முன்னேற்ற இலட்சியத்துக்கு பயனுள்ள உத்தரவாதத்தை வழங்கும் என்று அறியப்படுகிறது என்று அவர் கூறினார்.
பல வருடங்களுக்கு முன்பு டத்தோக் ஷாபி அப்டால் ஒற்றுமை கலை கலாச்சார பாரம்பரிய அமைச்சாராக இருந்த பொழுது இச்சட்டத்தை பற்றிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இதுநாள் வரை மத்திய அரசாங்கம் இச்சட்டம் குறித்த அவரின் ஆலோசனையை தொடரவில்லை என்பதே உண்மையாகும். அதன் தொடர்பில் தற்சமயம் இனவாத வார்த்தை பயன்பாடு மிகவும் பரவாலாக இருக்கும் காரணத்தினால், அரசாங்கம் தேசிய தலைமைச் சட்ட அதிகாரியை இச்சட்டம் குறித்த மாதிரி சட்டரிக்கையை ஒன்றை தயார்செய்ய ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று கர்பால் கேட்டுக்கொண்டார். "மேலும் அந்த மாதிரி சட்டரிக்கை வருகிற நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்து அதனை அரசாங்கம் மக்களின் கருத்துக்களுக்கு பதிப்பளிக்கும் வகையில் அமைய வகைசெய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயங்களை கேட்டறிந்து அச்சட்டத்தை இன்னும் வலிமையான முறையில் உருவாக்கவேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்" என்றார் கர்பால்.
"இனவாத பேச்சுக்கள் இனியும் இந்நாட்டில் உருவாகக்கூடாது. தற்சமயம் எழுந்துள்ள இனவாத பேச்சுக்கு இதுவே மிகச் சிறந்த தீர்வாக அமையவேண்டும். ஆகவே தயாரிக்கப்படும் மாதிரி சட்டரிக்கையில் இனவாத பேச்சுக்கும் செயலுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதனை முழுமையான விரிவாக்கத்துடன் அவை அமையவேண்டும்.இது மக்களின் நலனை மட்டுமல்லாமல் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடிய செயலாக திகழவேண்டும்.அரசாங்க அதிகாரிகளின் எல்லையில்லா இனவாத பேச்சுக்கள் பல இன மக்களின் ஒற்றுமையை சீர்குலைந்து விடும். இது கடுமையாக கருதப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாகப்பட்டால்தான் இச்சூநிலையை முற்றாக ஒழிக்க முடியும்" என்றார் அவர்.
Subscribe to:
Posts (Atom)











