Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Monday, January 17, 2011

மக்களுடன் பொங்கலோ பொங்கல் கொண்டாட்டம் - வணக்கம் மலேசியா செய்திகள்


ஈப்போ வட்டாரத்தில் அமைந்துள்ள கம்போங் தை லீ கிராமத்தில் சமூக நல கலந்துரையாடல் இயக்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் தினத்தன்று "மக்களுடன் பொங்கலோ பொங்கல் கொண்டாட்டம்" மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
இந்த விழாவில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன், பேராக் மாநில இந்து சங்க பேரவையின் தலைவர் திரு.ஏகாம்பரம் மற்றும் சுற்று வட்டார மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
இந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு, பல தனியார் கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் ஏற்பாட்டாளர் ஏற்பாடு செய்த பொங்கல் போட்டியில் கலந்து கொண்டனர். இப்பொங்கல் போட்டி வந்திருந்த பொது மக்களின் பார்வையை மிகவும் கவர்ந்தது. 
இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக கலந்துக்கொண்ட மு.குலசேகரன் அவர்கள், இது போன்ற பாரம்பரிய நிகழ்வுகளை அனைத்து இந்தியர்களும் ஒன்றுமையாக கொண்டாடி அதன் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். 
அவரை தொடர்ந்து பேராக் மாநில இந்து சங்க தலைவர், திரு ஏகாம்பரம் அவர்கள் பேசுகையில், பொங்கலின் மகத்துவங்களை பற்றி வந்திருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்.


பொங்கல் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு மு.குலசேகரன் பரிசுகளை எடுத்து வழங்கினார். இறுதியாக இப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கம்போங் தை லீ மக்கள் அன்னதானம் வழங்கினர். 

இந்நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியதற்கு ஏற்பாட்டுக் குழுவின் தலைவி திருமதி.ஆ.சுகந்தி அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.