Saturday, August 21, 2010

19/08/2010 மன்ஜோங் நில அலுவலகத்தில் மகஜர் சமர்பிப்பு.

படத்தொகுப்பு


டிண்டிங்ஸ் நில விவகாரம் தொடர்பில்,மத்திய அராசாங்கத்தின் விருப்பத்தை எதிர்த்து மு.குலசேகரன் தலைமையில் மன்ஜோங் நில அலுவகத்தில் எதிர்ப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை பெற்றுக்கொள்ள மாவட்ட நில அலுவலக நிர்வாக அதிகாரி அங்கு இல்லாத பட்சத்தில் அதனை பெற்றுக்கொள்ள எந்த ஒரு தரப்பிரனும் முன்னவரவில்லை. ஆயினும் அதனை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத பிரச்சனை ஒன்று புதிதாக உருவாகும் அச்சத்தில் நில அலுவலக பணியாளர் ஒருவர் அதனை 45 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்றுக்கொண்டார்.


இந்த மகஜர் சமர்பிக்கும் நிகழ்வில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சித்தியவான் வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர். உடன் பேராக் மாநில ஜ.செ.க தலைவர் டத்தோ ங்கே கூ ஹம், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன், ஜ.செ.க காமாச்சி துரைராஜூ, ஈப்போ பாராட் கிளைத்தலைவர் சேகரன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பெ. சுகுமாரன், டிண்டிங்ஸ் செயலவை உறுப்பினர்கள் சண்முகம், மு.சேதுபதி, ஜெகநாதன் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment