Tuesday, October 26, 2010

"பெண்கள் முன்னேற்ற மனித பாதுகாப்புக்கு அதிகாரமளித்தல்"

இம்மாதம் 23 ம், 24 ம் திகதி இஸ்தான்புல், துர்கீயில் நடைபெற்ற "பெண்கள் முன்னேற்ற மனித பாதுகாப்புக்கு அதிகாரமளித்தல்" மாநாட்டில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் ஆற்றிய உரை.


கடந்த பல வருடங்களாக மலேசியாவில் மனித கடந்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மலேசியா கவனிப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதில் பெண்களும் மற்றும் சிறார்களும் இதற்க்கு ஆளாகி வருகின்றனர்.

சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு படி சுமார் இரண்டு இலட்சம் பெண்களும் இரண்டு இலட்சத்து இருபத்தைந்து சிறார்களும் தென்கிழக்கு ஆசியா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படிருக்கிறார்கள் என்று புள்ளி விவகாரம் காட்டுகிறது.

இந்த புள்ளி விவகாரப்படி இதில் சுமார் 60 சதவிகித மக்கள் நாட்டில் புகுந்து குறிப்பிடாத காலகட்டத்தில் மாயமாகுகின்றனர். மீதமுள்ள 40 சதவிகித மக்கள் தென்கிழக்கு நாடுகளில் விநியோகம் செய்யப்படுகின்றனர். மலேசியா நாட்டில் குற்ற செயல்கள் அதிகரிப்பு போதை, சட்டவிரோத பண பரிவர்த்தணை, சட்டவிரோத வர்த்தகம் மற்றும் பல விதமான செயல்கள் துள்ளியமாக நடைபெறுகிறது.

பெண்கள் மற்றும் குழைந்தைகள் பாலிய தொழிலுக்கு கடத்த மலேசியா ஒரு சிறந்த சந்திப்பு முனையாக திகழ்கிறது என்பது உண்மையாகிறது. சமீபத்தில் குடிநுழைவு அதிகாரிகள் இவர்களுக்கு துணை நின்றதின் காரணமாக பல அதிகாரிகள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். மலேசியாவிற்கு கொண்டு வரப்படும் பெண்களுக்கும் சிறுமிகளும் பர்மா கம்போடியா இந்தோனேசியா பிலிப்பைன் தாய்லாந்து மற்றும் வியாட்நாம் போன்ற நாடுகளிலிருந்து மலேசியாவிற்குள் கடத்தப்படுகின்றனர். அதன் பிறகு இந்தோனேசியா பிலிப்பைன் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு சட்டவிரோத சீன வர்த்தக மூலம் கடந்தப்படுகின்றனர்.


சட்டவிரோத குடியேறிகள் பலர் உடலுழைப்பு தொழிலாளிகளாகவும், கட்டுமாண தொழிலாளர்களாகவும் ,விவசாய துறைகளில் பணியாட்களாகவும் வேலை செய்யும் பொழுது பல இன்னல்களை சந்திக்கின்றனர். சமீபத்தில் தலைதூகியுள்ள இந்த ஆள் கடத்தல் வர்த்தகம் மிகப்பெரிய லாபத்தை தருவதாக அறிவிக்கப்படுள்ளது. இதன் வர்த்தக லாபத் தொகை சுமார் 2 கோடி வெள்ளி மதிப்பை தாண்டுகிறது என்று சொல்லப்படுகிறது. அதற்க்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வது விபசார தொழிலாகும். மலேசியாவில் விபச்சாரம் சட்டவிரோதம். அதிலும் சட்டவிரோத தொழிலில் வெளிநாட்டவர்கள் ஈடுபடுவது பொதுவாகிவிட்டது.

மனித கடத்தல் எதிரான சட்டம் 2007 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றபட்டாலும் அதில் பல குறைபாடுகள் இருக்கவே செய்கிறது. இதன் விளைவு பல அப்பாவி மக்கள் இது போன்ற செயல்களை தீவிரப்படுத்தும் கும்பலிடம் சிக்கி பாழாபோவது. இவர்களின் அறியாமையும் இதற்க்கு காரணம் என்று சொல்லலாம். சட்ட விரோத மனித கடத்தலை பற்றி பகுத்தறிவு அல்லாமையே இதற்க்கு காரணம்.

சமீபத்தில், குடிநுழைவு இலாக்காவை சார்ந்த அதிகாரிகளை கைது செய்தது வரவேற்கக்கூடிய ஒன்று. இவர்களின் மேல் முறையான விசாரணை நடத்தி இவர்களுக்கு பின்னணியில் இருக்கக்கூடிய மேலும் பலரை அரசாங்கம் விரைந்து கைது வேட்டையை தீவிர படுத்த வேண்டும்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

1998 ம், பல நாடுகள் ரோம் சட்ட விதிகளுக்கு மதிப்பளித்து ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பினர் ஆனார்கள். இந்த சட்ட படி உலக நாடிகளில் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த ஒரு நாடாக இருந்தாலும் இதன் சட்டத்திலிருந்து தப்ப முடியாது. அந்த வகையில் இந்த சட்டத்தின் கீழ் இன படுகொலை, மனிதகுளத்திற்கு வேறுபட்ட கொள்கை பயன்பாடு, கூட்டுக்கொலை, கற்பழிப்பு போன்ற அனைத்தும் மிகவும் கடுமையாக கருதப்படிகிறது. இந்த சட்ட மசோதாவை உலக நாடாளுமன்ற நடவடிக்கை குழு முழுமையாக ஊக்கம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 28-ம் திகதி மே மாதம், உகாண்டா நாட்டில் கம்பாலா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமதுறை அமைச்சர் டத்தோ நஸ்ரி அவர்கள் கூடிய விரைவில் மலேசியா இந்த ரோம் சட்ட குழுமத்தில் உறுப்பினராக சேர கையெழுத்திடும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நான் கேள்வி எழுப்பிய பொழுது, வெளியுறவு அமைச்சு ரோம் சட்ட குழுமத்தில் இணையும் அறிக்கை ஒன்றை கூடிய விரையில் அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்ய விருப்பத்தை அறிவித்தது.

இன்றைய நாள் வரை சுமார் 100 நாடுகள் இந்த ரோம் சட்ட குழுமத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் மலேசியா அரசாங்கத்தின் மெத்தன போக்கு அனைவைரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

(பட குறிப்பு - மு.குலசேகரனுடன், புகிட் மேர்த்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் சொங் எங் மற்றும் இம்மாநாட்டின் ஏற்பாட்டு குழுச் செயலாளர் ரபி)

No comments:

Post a Comment