Friday, December 24, 2010

கருணை மடல்

காராக்கடந்த டிசம்பர் மாதம் 2009 பாஹவ் நகரில் கொத்தடிமை கொடுமையில் சிக்கிய குனாவை ஜசெக வைசேர்ந்த காமாட்சி துரை ராஜூ காவல் துரையினர் உதவியோடு மீட்டு வந்தார்குனா வயது 16 தந்த தகவல் படிஅவருடைய அக்கா ப்ரியாவும் வயது 19 மீட்கப்பட்டார்

குனா தற்பொழுது காராக்கில் ஒரு வாகனம் கழுவும்பட்டரயில் வேலை செய்து வருகிரார்இவருக்கு பிறப்பு பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லைபல முறைமுயற்சி செய்தும் அவற்றை பெருவதில் பிரச்சனை அதிகமாக இருப்பதாக காமாட்சி துரை ராஜூ கூறினார்இதுவிஷயமாக சில மாதங்களுக்கு முன் டத்தோ தேவமனியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த போது உதவிகேட்டிருந்தேன்இது நாள் வரை எந்த பதிலும் கிடைக்க வில்லை

தாய் தந்தை இருவரும் பராமரிக்கும் குழந்தைகள் கூட தவரான வழியில் பாதை மாறி செல்வது நாம் கண்கூடாக பார்க்க நேர்கிறதுகுனாவோ சிறுவயது முதல் பெற்றோரை பார்காமல் சிறார் கொடுமைக்கு ஆளானர்மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம்ஒதுங்காதவர்

மிகச் சிறிய வயதிலேயே கடுமயாக வேலை வாங்கப்பட்டவர்சம்பளம் இல்லாமலேயே பல இடங்களில் வேலை செய்துள்ளார்இவருக்கு கிடைத்ததெல்லாம் அடியும் உதயும் தான்.

நாகரீகம் வலர்ந்த இந்த காலத்தில்  பிறரிடம் எப்படி பழகுவது என்பது கூட தெரியாமல் வளர்ந்தது குணாவின் குற்றமா?

இன்றைய நிலையில் குனாவின் எதிர்காலம் ஒரு பெரிய கேள்வி குறியாக உள்ளதுஅவரை கொட்தடிமை கொடுமையிலிருந்து காப்பாற்றியதோடு கடமை முடிந்துவிட்டது என்று என்னால் நிறுத்திக் கொள்ளமுடியவில்லைஅவனுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் பல முயற்சிகளை செய்துவருகிறேன் என்று திருமதி காமட்சி வருத்தம் தெரிவித்தார்

பல ஆசிரமங்களுக்கு தொடர்பு கொண்டு அவரைசேர்க்க முயற்சி செய்தேன் பலன் இல்லை.சமூக நல இலாகாவிலும் நேரில் சென்று இவர் பிறச்சனையை பற்றி பேசினேன்முதலில் அடையாள அட்டை எடுத்து வர சொல்லி விட்டார்கள்

குனாவின் எதிற்காலம் கறுதி கருனை உள்ளம் கொண்ட யாராவது அவருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்தால் நமது சமுதாயத்திற்கு செய்த பெரிய உதவியாக இருக்கும்கல்வி அறிவு கிடைக்க பெறாத குனாவிற்கு தொழில் கல்வி மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறதுஆகவே தொழிற்கல்வி நடத்தும் நிறுவனஙள் முன் வந்து குனாவிற்கு உதவி செய்ய முன் வர வேண்டுகிரேன்.

நன்றி
காமாட்சி துரை ராஜூ
 செ பஹாங் 

No comments:

Post a Comment