Friday, January 28, 2011

மூக்கை நுழைத்தது குலசேகரன் அல்ல! -

செம்பருத்தி இணையதளம் செய்தி.










ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை என்பது மக்கள் பிரச்னையை நாடாளு மன்றத்தில் மட்டும் விவாதிப்பதில் இல்லை, மாறாக அனைத்து உள்ளநாட்டு வெளிநாட்டு அரசியல், சமூகவியல், பொருளாதாரம் என்று இன்னும் பல மக்களின் பிரச்னைகளை இனம் மதம் பாராமல் குரல்கொடுப்பதே அவர்களின் முதற்க் கடமை என பஹாங் மாநில ஜ.செ.க-வின் மகளிர் தலைவி து.காமாட்சி தெரிவித்துள்ளார்.
“குவால பிலா தமிழ்ப்பள்ளியின் விவகாரத்தை மு.குலசேகரன் அவர்கள் மூக்கை நுழைத்தார் என்று நெகிரி மாநிலத்தின் முன்னாள் ம.இ.க இளைஞர் அணியின் சசாசி சாடுவது எந்த வகையில் நியாயமாகும்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் து.காமாட்சி இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணியில் மக்கள் சேவையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது யார் சகோதரர் சசாசி அவர்களே?
உங்கள் ம.இ.க தலைவர்கள் அதிகப்படியான நேரங்களில் தொகுதி விட்டு தொகுதி சென்று பல நிகழ்சிகளில் கலந்து கொள்வது சரியா? அல்லது அவர்களும் நீங்கள் சொன்னது போல அடுத்த பொதுத்தேர்தலில் வாய்ப்புக்கு கல்தாவா?
மக்களின் ஆதரவை மகுடமாக் கொண்டு செயல்படும் மு.குலசேகரன் போன்ற தலைவர்களை குறைக் கூறுவதற்கு உங்களின் அரசியல் தகுதி என்ன? அல்லது இனிமேல் தான் வாய்ப்பின்  வழியை உருவாக்கிக் கொள்கிறீர்களா?
மு.குலசேகரனை குறை கூறினால் உங்களுக்கு அரசியலில் வாய்ப்பு மலரும் என்றால், உங்களின் தாக்குதலை மு.குலசேகரன் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வார் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
ஐயா மேதாவி சசாசி அவர்களே, குவால பிலா தமிழ்ப்பள்ளியின் பிரச்னைக்குத் தீர்வு கண்ட விஷயம் என்று சொல்லும் நீங்கள், மு.குலசேகரனிடம் இப்பிரச்னையைக் கொண்ட வந்த பொது மக்களிடம் தெரிவித்திருக்கலாமே? ஏன் செய்ய வில்லை?
பல நாட்களாக் இப்பிரச்னையை அப்பள்ளியின் மாணவர்களும் பெற்றோர்களும் குரல் கொடுத்த பொழுது உங்களின் அதிமேதாவிதனத்தை அங்கே காட்டிருக்கலாமே? ஏன் காட்ட வில்லை? அவ்வாறு செய்திருந்தால், மு.குலசேகரனிடம் மக்கள் இப்பிரச்னையை கொண்டுவர அவசியம் உருவாக்கி இருக்காது.
அந்த பள்ளிக்கு நிலம் அங்கே உள்ளது இங்கே உள்ளது என்று தட்டி கழிக்காமல் உடனடியாக அப்பள்ளிக்கான நிலப்பட்டாவை உரிய நேரத்தில் உரிய தரப்பினரிடம் வழங்கிருந்தால் இப்பிரச்னை தீர்வு கண்டிருக்கும் அல்லவா? இந்த சொற்ப அரசியல் அறிவு கூர்மை கூடவா இல்லை உங்களுக்கு?
சகோதரர் சசாசி, கடந்த திகதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்க்கா அப்பள்ளிக்கான நிலத்திற்கு குரல் கொடுத்திருந்தால் மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கும் அல்லவா? அதனை தவிர்த்து வீண் குறை கூறுவது யாருக்கும் லாபம் தராது அதுவும் நீங்கள் கூறிய அதிமேதாவிதனமான குறைகளுக்கு சொல்ல வார்த்தை கிடையாது.
ஏன் இவ்வளவு அனாவசியத்தனம். அக்கூட்டம் யாருடைய அரசியல் நாடாகமல்ல, ஆனால் ம.இ.க.வின் குட்டி தலைவர்களின் அரசியல் கூத்தை வெட்டவெளிச்சமாக்கிய நிகழ்வு அது. உணர்ந்து கொள்ளவும்.
இறுதியாக, இந்த ஒரு தமிழ்ப்பள்ளி மட்டும் தான் பிரச்னையாக உள்ளது போலவும், அதற்க்கு மு.குலசேகரன் போன்ற தலைவர்கள் முட்டி மோதி கொண்டு தலையிட்டு அரசியல் படம் காட்டுவது போலவும் விளங்காமல் விளங்காத்தனமாக கருத்து தெரிவித்த சகோதரர் சசாசி, நாட்டில் இன்னும் எத்தனையோ தமிழ்ப்பள்ளி கூடங்கள் இவ்வகையான அவல நிலையில் இருக்கின்றன என்று தெரிந்து பேசவும்.
இந்நிலை இன்று புதிதாக முளைத்தது அல்ல, 53  வருட தேசிய முன்னணி ஆட்சியில், ம.இ.க.வின் சாதனையின் சின்னம் என்று புறிந்து கொள்ள வேண்டும்.
குவால பிலா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் மு.குலசேகரனின் நற்பணியை புரிந்திராமல் பத்திரிகை அறிக்கை விட்டு அரசியலில் பரிதாப நிலையில் இருக்கும் சசாசி போன்ற சகோதரருக்கு இத்தெளிவுரை பிற்காலத்தில் கைகொடுக்கும் என காமாட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment