Showing posts with label லிம் கிட் சிங். Show all posts
Showing posts with label லிம் கிட் சிங். Show all posts

Wednesday, June 22, 2011

தேசிய முன்னணி பெர்சே 2.0 அமைதி பேரணியில் கலந்து கொள்ள லிம் கிட் சியாங் அழைப்பு


தேசிய முன்னணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் பெர்சே 2.0 பேரணியில் கலந்து கொண்டு, நேர்மையான சுதந்திரமான மாசில்லாத முறையில் தேர்தல் நடைபெறவேண்டும் என்று மக்கள் குரல் கொடுப்பதற்கு ஆதரவு தரவேண்டும் என்று ஜ.செ.க வின் ஆலோசகரும் ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். 

நாட்டினுடைய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஜாக், துணை பிரதமர் முகைதீன் யாசின் மற்றும் தேசிய முன்னணியின் இதர அரசியல் தலைவர்களும் ஜூலை 9 ம் திகதி நடைபெறும் அந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டு மக்களுக்கு அங்கிகாரம் தர வேண்டும் என்று ஜ.செ.க-வின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான கிட் சியாங் அழுத்தமாக தெரிவித்துள்ளார். 

"இந்த அழைப்பு பெர்சே பேரணியின் தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சிகள் (தேசிய முன்னணியும்) மற்றும் அரசாங்க சார்பற்ற இயக்கங்களுக்கும் விடுத்த அழைப்பின் பெயரில் நான் இந்த அழைப்பை விடுக்கிறேன்" என்று தனது செய்தி அறிக்கையில் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பிரதமருடன், துணை பிரதமர், தேசிய முன்னணியின் அமைச்சரவையின் உறுப்பினர்கள் மற்றும் இதர தேசிய முன்னணி அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வை குறித்து வெளிப்படையான நிலைப்பாடினை வெளியிட்டால் அவை அவர்களின் தலைமைத்துவத்தின் நேர்மையான நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் அதே தருணத்தில் நமது மலேசியாவின் ஜனநாயகத்தின் வரலாற்றின் அடையாளமாக அந்நாள் திகழும் சாத்தியமுண்டு என்று அவர் மேலும் தெரிவித்தார்.



- பெர்சே கோரிக்கை பின் வருமாறு: 

- கண்யமற்ற வாக்காளர் பட்டியலை தூய்மைபடுத்துதல்
- தபால் வாக்களிப்பு முறையை சீர்படுத்துதல் 
- நிலையான மையை பயன்படுத்துதல் 
- தகவல் ஊடங்கங்களுக்கு சுதந்திரத்தை வழங்குதல்
- 21 நாட்கள் தேர்தல் பிரசார அவகாசத்தை வழங்குதல் 
-அரசியல் சட்டத்தை நடைமுறைபடுத்தும், பொது அமைப்புகளை பலப்படுத்துதல்  
- லஞ்ச சீர்கேட்டை நிர்மூலமாக்குதல். 
- தூய்மையற்ற அரசியல் கொள்கையை அகற்றுதல் 


இதனை தொடர்ந்து கூடுதலாக இரண்டு தீர்மானங்களை கிட் சியாங் தனது கோரிக்கையில் இணைத்துள்ளார். அவை,


- எந்த சூழ்நிலையிலும், 1969 ம் ஆண்டில் நடைபெற்ற மேஇதனை தொடர்ந்து கூடுதலாக இரண்டு தீர்மானங்களை கிட் சியாங் தனது  13, கருப்பு நாளை தேர்தல் காலத்தில் நினைவுபடுத்தல் கூடாது ; மற்றும் 

- நாடாளுமன்ற கலைக்கப்பட்ட பிறகு "அரசாங்க காப்பாளர்" அமைச்சரவையை தற்காலிகமாக அமைக்க வேண்டும். அவ்வப்போது அமைச்சர்களும் மற்றும் மாநில ஆட்சி குழு உறுப்பினர்களும் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யாமல் இருக்க வேண்டும். அதே சமயத்தில், எந்த ஒரு சிறப்பு அரசாங்க ஒதுக்கீடுகளை வழங்குவதாக அறிவித்தல் கூடாது என்று, லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். 

Saturday, November 6, 2010

ஜ.செ.க ஈப்போ பாராட் "தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு"

லிம் கிட் சியாங் அவர்கள் உரையாற்றுகிறார்

ஏற்பாட்டு குழுவினருடன் மு.குலசேகரன்

<>
வருகையளித்த பொது மக்கள்

குத்து விளக்கு ஏற்றுதல்

திறப்புரை வழங்கும் மு.குலசேகரன்


சிறப்புரை வழங்கும் டத்தோக் ஸ்ரீ நிஜார்

Thursday, September 2, 2010

நஜிப்பின் ஒரே மலேசியா கொள்கைக்கு மகாதீரே சிறந்த தடங்கள் - லிம் கிட் சிங்

கடந்த காலத்தை காட்டிலும் இன்றைய சூழ்நிலையில் பல இனங்களுக்கு மத்தியில் ஒன்றுமை பிளவுபட்டிருப்பதாக மகாதீர் தனது வலைப்பதிவில் கூறுயுள்ளார்.

நீண்ட காலம் பிரதமராக் இருந்த மகாதீர், நஜிப்பின் ஒரே மலேசியாவின் கொள்கையான "உருமாறும் தேசமாக மலேசியா" என்ற கருப்பொருளின் கீழ் இன்று மலேசியா வாழ் பல இன மக்களின் ஒற்றுமை மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது என்பதனை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது போன்ற சூழ்நிலை கடந்த 22 ஆண்டுகளில் நிகழ்ந்ததே கிடையாது என்கிறார் மகாதீர்.

மகாதீரின் கூற்றை நஜிப் முழுமையாக ஏற்றுக்கொள்வார? கடந்த மாதத்தில் நஜிப்பின் உருமாறும் தேசமாக மலேசியா" நிகழ்ச்சி குறித்து தனது அதிருப்தியை மகாதீர் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் இன ஒற்றுமையை எந்த ஒரு காலகட்டத்திலும் நஜிப் நிலைப்படுத்த முயற்சி செய்யவில்லை என்பதே மகாதீரின்  குற்றச்சாட்டு. ஒரே மலேசியாவின் கொள்கையை பல இனங்களுக்கு மத்தியில் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டுள்ளது என்று மகாதீர் கூறுகிறார்.

புதிய பொருளாதார திட்டத்தை முழுமையாக எதிர்க்கும் பட்சத்தில்,இது போன்ற பொருளாதரா திட்டம் புரட்சியை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும் என்பது மகாதீரின் கருத்தாக திகழ்கிறது.

நஜிப்பின் "இனவாத தகுதி" முறை முதன்மையாக இருக்கும் வேளையில் ஒரே மலேசியா கொள்கையான "மக்களுக்கு முதன்மை" என்ற சூழ்நிலை எந்த வகையில் சாத்தியமாகும் என்று கேள்வியை மகாதீர் கேட்டுள்ளார்.

ஆகவே 53-ம் ஆண்டு சுதந்திர தின நாள் கொண்டாடத்தில் மகாதீர், நஜிப்பின் கொள்கைக்கு எதிரியாக திழகும் வேளையில் எந்த விதத்தில் ஒரே மலேசியா கொள்கை சாத்தியாமாகும் என்ற கேள்வி உதிர்துள்ளது.

இதன் அடிப்படையில்,நஜிப் தனது ஒரே மலேசியா மற்றும் உருமாறும் தேசிய கொள்கையினை மாற்றியமைப்பாரா அல்லது அதிலிருந்து  பின்வாங்குவார என்ற கேள்வி உருவாகிஉள்ளது?

அவ்வைகையில் அம்னோ அல்லது தேசிய முன்னணி ஆதரவாளர்களின் விசுவாசி என்ற பெயரை பெறுபவர்  யாராகைருக்கும் என்ற கேள்விக்கு பதில்...நஜீப்பா அல்லது மகாதீரா?