Tuesday, September 7, 2010

உணர்ச்சிவசம் வேண்டாம்.....சிந்தித்து செயல்படுவோம்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காலகட்டத்தில் இனவாத பேச்சு மேலும் தலைத்தூக்கி உள்ளது என்ற உண்மை அனைவராலும் அறிந்த ஒன்று. ஒரு மதத்தை இழிவு படுத்த இணையம் மூலம் தனது அடையாளத்தை மறைத்து அல்லது பிறரின் பெயர் முகவரியில் தனது இனவாத கருத்துக்களை வெளிப்படுத்துவது தரமற்ற நோக்கத்தையும் தைரியமைற்ற செயலையும் வெளிபடுத்துகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற செயல்கள் முழுமையாக கவனிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஆனால் இதற்க்கு யார் பின்னணி என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மையாகும். இருப்பினும் மலேசியா தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இது போன்ற உணர்வற்ற மனிதர்களின் இனவாத செயலை தடுத்தி நிறுத்த அனைத்து வழிகளும் இருக்கும் வேளையில் ஏன் இன்றைய நாள் வரைக்கும் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்ற கேள்விக் எழ செய்கிறது. பொதுவாக இந்தியர்களை இழிவுபடுத்தம் இணைய பதிவாளர்களின் மேல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அப்படி உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது போன்ற இனவாத செயலுக்கு ஆதரவளிப்பதாக பொருளாகும் என்பதனை தெரிந்துகொள்ள மறந்துவிட்டார்களா? அல்லது அலட்சியப்போக்கா?

அரசாங்கம் இனவாத செயலை தூண்டுகிறதா அல்லது இனவாத அரசாங்கமாக மாறுகிறதா? முன்பு இல்லாத இனவாத பேச்சும் செயலும் இப்பொழுது திடீரென்று எழுந்துள்ளது ஏன்?

கீழே உள்ள படங்களை பாருங்கள்...இணைய தளத்தில் பல விசயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கும்பொழுது இனவாதமாக பேசி பலரின் உணர்சிகளை தூண்டும் அளவிற்கு செயல்படுவதை கவனிக்கலாம்.
 



இருப்பினும் நமது நாட்டின் சுபிச்சத்தை நிலைப்படுத்த இது போன்ற வர்ணனைக்கு நாம் ஒருபொழுதும் உணர்ச்சிவசமாக கருத்துரைப்பது தவறாகும். ஆகையால் இது சம்பந்தமாக அனைவரும் ஒன்றிணைந்து போலீஸ் புகர் செய்வதே சிறந்த செயலாகும் என்ற ஆலோசனையை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment