Showing posts with label போலீஸ் அராஜகம். Show all posts
Showing posts with label போலீஸ் அராஜகம். Show all posts

Monday, August 30, 2010

ஜ.செ.க சுகுமரானை எதற்காக போலீஸ் கைதுசெய்தது?

கடந்த 22ம் திகதி சித்தியவான் போலீஸ் நிலையம் முன் கைது செய்யப்பட்ட ஜ.செ.க சுகுமாரனின் ஜாமீன் இன்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டது. தன்னை எந்த சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்ட விவரங்கள் குறிப்பிடாத ஜாமீன் கட்டளை ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்வி இன்று உருவாகிஉள்ளது. இதற்க்கான விளக்கத்தை ஸ்ரீ மன்ஜோங் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி விளக்கமளிக்க வேண்டும் என்று பெ.சுகுமாரன் கேட்டுக்கொண்டார்.

மேலும் தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகளை தாம் அடையாளம் காட்டிய பிறகும் அவ்விருவரும் மேலும் பணியில் ஈடுபடுவது குறித்து பெ.சுகுமாரன் வருத்தம் தெரிவித்தார். போலீஸ் தனது அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமல் இரட்டை வேடம் போடுவது தமக்கு வேதனை அளிக்கிறது என்றார். தவறு செய்தவர்கள் யாராகினும் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவர்களை காப்பாற்றுவது சட்டத்திற்கு எதிரான செயலாக விளங்குகிறது.

இவ்விவகாரம் குறித்து மாநில போலீஸ் படைத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அது மட்டுமில்லாமல் அந்த இரு போலீஸ் அதிகாரிகளும் வழக்கு முடியும் வரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனை குறித்து பேசிய மு.குலசேகரன்,போலீஸ் படை என்றைக்கும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய பாடுபடவேண்டுமே ஒழிய மக்களுக்கு பாதிப்பு விளைவிக்கும் அளவிற்கு செயல்பட கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

"அந்த இரண்டு அதிகாரிகளின் மேல் போலீஸ் படையும் அரசாங்கமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடக்க ஏதுவாக, ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும் வரை அந்த இரண்டு அதிகாரிகளும் தற்காலிக பனி நீக்கம் செய்வதற்கு போலீஸ் தனது தனிப்பட்ட முடிவை செயல்படுத்துவது முறையாக இருக்கும்." என்றார் மு.குலசேகரன்.

இப்பிரச்சனை குறித்து கூடிய விரைவில் மனித உரிமை மீறலுக்கு தாம் மகஜர் ஒன்றினை வழங்கவிருப்பதாக மேலும் கூறினார்.

Friday, August 27, 2010

25/08/10 - மன்ஜோங் நில அலுவலக வளாகத்தின் சூழ்நிலை

தூரத்திலிருந்து பார்க்கும் போது அமைதியான சூழ்நிலையில் மன்ஜோங் நில அலுவலகம். நில அலுவலக தூண்களில் ஒட்டப்பட்ட டிண்டிங்ஸ் நிலம் குறித்த கூட்ட அறிக்கை.

                                    
எதற்கும் தயாரான நிலையில் உள்ள போலீஸ் வண்டிகள். இங்கு மட்டுமல்லாமல் மேலும் பல இடங்களில் தயார் நிலையில் பல போலீஸ் வாகனங்கள் நிறுந்தப்பட்டன. 



சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்


சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்

 சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்



சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்


மன்ஜோங் மாவட்ட போலீஸ் உளவுத்துறை தலைமை அதிகாரி மணிவண்ணன்.


வேலைவெட்டி இல்லாமல் மக்கள் பணத்தில் வாங்கிய புகைப்பட கருவியை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் போலீஸ் அதிகாரி.


 திரு கோ.முனியாண்டி - தமிழ் நேசன் நிருபர்.


 திரு.சண்முகம் வந்திருக்கும் மக்களிடம் நிலவரத்தை விளக்குகிறார்.


 மண்ணின் மைந்தன் மு.குலசேகரன் மற்றும் போராட்டத்தில் இரத்தம் சிந்திய பெ.சுகுமாரன் நில அலுவகத்தில் வந்தடையும் காட்சி.

அஞ்சா நெஞ்சேன் மு.குலசேகரன் போலீஸ் உளவுத்துறை அதிகாரிகளிடம் உரையாடுகிறார்.

மன்ஜோங் நில அலுவலக ஆணையாளரை சந்திக்க செல்லும் காட்சி.
மு.குலசேகரன் அருகில் பெ.சுகுமாரன், தே.தனபாலன், திரு.குமார், திரு.ஜெகா மற்றும் பலர்.

ந்மன்ஜோங் மாவட்ட நில அலுவலக ஆட்சியாளரை சந்தித்து விளக்கம் கேட்கும் மு.குலசேகரன் மற்றும் பலர்.

மாவட்ட ஆட்சியாளரை சந்தித்த பிறகு பத்திரிக்கை பேட்டி வழங்கும் மு.குலசேகரன், திரு,சண்முகம், பெ.சுகுமாரன்.

எதிர்ப்பு மகஜர்

பல போலீஸ் உளவுத்துறை அதிகாரிகள் தம்மை சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்தாலும் சற்றும் அசராத பெ.சுகுமாரன். போராட்டத்தின் மாவீரன் என்று மு.குலசேகரன் புகழாரம்.

பல இன மக்கள் இந்த எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பெ.சுகுமரானுடன் புகைப்படம் எடுத்த பொழுது.....



எது எப்படி இருந்தாலும் சித்தியவான் இந்தியர்களின் ஒன்றுமை இந்நிலப் பிரச்சனையில்  நன்கு அறிய முடிந்தது. டிண்டிங்ஸ் இந்திய சங்க நிலம் என்றைக்கும் இந்தியர்களின் சொத்தாகவே திகழும் என்று தைரியாமாக சொல்லலாம்.
இனி எந்த கொம்பனும் இந்நிலத்தை தொட முடியாது.

Thursday, August 26, 2010

நில அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பெ.சுகுமாரன் வழங்கிய பேட்டி


தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகளை பற்றிய விவரத்தை குறித்து பேசிய பெ.சுகுமாரன், போலீஸ் தனது கடமையை செய்ய ஒரு பொழுதும் தான் தடையா இருந்ததே கிடையாது, ஆனால் தன்னை தாக்குவதற்கு போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன உரிமையுள்ளது  என்று வினவினார். பல போலீஸ் அதிகாரிகள் அந்த பேட்டியை  பதிவு செய்து கொண்டிருந்த போதிலும், சற்றும் அசராத இந்த தமிழன், மாநில போலீஸ் படைத் தலைவர் இவ்விவரம் குறித்து உண்மையான விவரங்களை கண்டறிந்து பேசும் படி  ஆலோசனை  கொடுத்தார். 

போலீசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - மு.குலசேகரன் அறிவிப்பு


போராட்டத்தில் இரத்தம் சிந்திய தமிழன் பெ.சுகுமாரன்

பெ. சுகுமாரன் கைது செய்த பிறகு சித்தியவான் போலீஸ் நிலையத்தில் தாக்கப்பட்டார்.